Posts

Showing posts from 2009

கூவாகமெ ஒன்னா சேந்துவந்து கும்மி அடிக்காத குறைதான்...!

Image
இது ஒரு சைகோ சம்பவம். மனம் பலகீனமானவர்கள் இதை படிக்கவேண்டாம். (பில்டப் எப்ப்ப்ப்ப்ப்பூபூபூடி..?) டினொசர் தான் ஷாருக்கான் மாதிரி இருக்கென்னு சும்மா ஃபிலிம் காட்டிகிட்டெ இருப்பான். ரொம்ப நாளுக்கு அப்புறம்தான் ரெண்டு பேருக்குமெ மீசையெ வளராது அப்புடின்ற ஒத்துமைய கண்டுபிடிச்சொம். எங்க செட்லெ அப்பொவெ நல்லா மீசை வச்சுட்டு இருந்த்து லோக்கல் பாய் மட்டும்தான். டினொசரொ ரோட்ல விக்கிற குருவி லேகியம் வரைக்கும் வாங்கி தடவி பாத்துட்டான். ஹூம்..ஹூம்..ஒரு புல்லு முளைக்குனுமெ...! மனம் வெறுத்து போய்.. தனக்கு இல்லாத இந்த கருமம் புடிச்ச மீசை எவனுக்குமெ இருக்க கூடாதுடா மெண்டல் அப்டின்னு, ஒரு நாள் நைட் சொன்னான். இவன் என்னடா இவ்வளவு குமுறிக்கிட்டு இருக்கானெ..! அப்டின்னு சொல்லுடா மாப்பு என்ன பண்ணலாம்னென்...அவன் முதல்ல உன் மீசையை எடுறான்னான். எனக்கும் பெரிய அளவு விளைச்சல் இல்லாத்தால..நானும் எடுத்துட்டென். எடுத்த பிறகு மாமு இப்பொதான் நீ அஜய்தேவ்கான் மாதிரி இருக்க.. நாம இப்பிடியெ இருப்பொம்னான்..(எதுக்கெல்லாம் கம்பெனி போட்ரானுங்க..பாருங்க...!) காலையிலெ எழுந்து ஒரு அஞ்சி பேருக்கு நாங்களாவெ பாதி மீசை எடுத்துட்ட

இதை நீங்க எதிர்பாத்துறுக்க மாட்டீங்க..!

Image
ப்ரியமான வாசகர்களுக்கு, கூகுள் தேடல் தளங்களில் தென்னிந்திய சிவாலயங்களை பற்றியும், சித்தர்களை பற்றியும் தேடல்கள் அதிகம் காணமுடிகிறது. அந்த தகவல்களை தொகுத்து ஒரு ப்லாக் எழுதும் ஒரு முயற்சியாக ஒரு புது ப்லாக் ஸ்பாட் தொடங்கி உள்ளென். "http://divine2shiva.blogspot.com" வழக்கமாக கோவில்களில் தலவரலாறு, சித்தர்களின் வாழ்க்கை பற்றி படிக்கும் பொறுமை, நம்மில் பல பேருக்கு இல்லை. அதனால் அந்த கோவில்களின் சிறப்பையெ அறியும் வாய்ப்பு இல்லாமல் ஏதொ நாமும் கோவில் போனொம் என்ற நிலையில்தான் இருக்கிறொம். அதனால் முடிந்த வரை சுருக்கமாக கோவில்கள் பற்றிய தகவல்களை தர முடிவு செய்துள்ளென் தினம் ஒரு ப்லாக் போஸ்டாக ஒரு மூன்று மாதம் இதை எழுதுவதாக உத்தெசித்துள்ளென். வாசகர்கள் தொடர்ந்து இந்த ப்லாக் படித்து கருத்துரைகள் எழுதி வரவேண்டுகிறென். ம்..ம்..இந்த வீனா போன ப்லாக் எழுதிய பாவத்தை நான் அப்படியாவது போக்கிக்கிறென்..! ஓம் நமசிவாய..!

தர்மஅடின்னா மட்டும் எங்கேந்து தான் கிளம்பி வருவானுங்களொ..!

Image
பாசக்கார பயமக்களெ...! இந்த கேடு கெட்ட கதை எல்லாம் படிக்கிரதுக்கு, ரெண்டு பெக் போட்டு தூங்கலாம்னுதான்..தோனும்..! ஆனா எப்டி வாழனும்னு ஆயிரம் புக் இருக்கு. எப்டி வாழக்கூடாதுன்னு ஏதாவது புக் இருக்கா? அதான் இந்த சரித்திர முக்கியம் வாய்ந்த முயற்சி. (அப்பாடா..ஒரு வாரம் ஆச்சி இந்த பாய்ண்ட யோசிக்க..!) தயுவு செஞ்சி அவுங்க அவுங்க மனைவி கிட்டெ இந்த தெரு புழுதி எல்லாம் காட்டாதிங்க.. ஏன்னா ஒரு நண்பர் ஒருத்தர் , அவர் மனைவி கிட்டெ இந்த ப்லாக் காமிச்சதில, என் பழக்கவழக்கத்தையெ நிறுத்த சொல்லிட்டாங்களாம். இது தேவையா? சரி.. சரி..நாம என்னா செய்ய முடியும்..! நாம நம்ம கடமைய செய்வோம்..! இப்பொ அந்த மலைஏற்ற சம்பவத்த பாத்துடுவொம். ஒருமுறை ஏதொ ஒரு பார்ட்டி...நாங்கதான் மாடு கன்னு போட்டாலெ பார்ட்டி கேட்பொமெ..! அதுனாலெ என்ன பார்ட்டின்னு சரியா நினைவு இல்லை. அஞ்சி ஆறு பெக்கு மேலெ போய் நான் கம்ப்ளீட்டா டினொசர் கண்ட்ரோல்ல போய்ட்டென். ஃபுல் பூஸ்ட்லெ டீ கடைக்கு போனொம். போன இட்த்திலெ டினொசர் என்னை அந்த டீ கடை அண்னண் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொன்னான். நானும் வயசிலெ பெரியவரா இருக்காரென்னு விழுந்து வணங்கிட்டென்.

என்னா ஒரு ஐடியா பாருங்க..! ரூம் போட்டு யோசிப்பானுங்களோ..?

Image
ஒரு நாள் இந்த ஈமொவும் டினொசரும் எப்பிடியொ என் கண்லெ மண்னை தூவிட்டு கள்ளு சாப்பிட போய்ட்டானுங்க..! வழக்கமா இந்த மாத்ரி விஷய்த்துக்கெல்லாம் ஈமொ தான் எங்களுக்கு எல்லாம் குரு. எப்பொ பாத்தாலும் மூனு பீர் அடிச்சமாத்ரிதான் மப்புலெ தான் இருப்பான். இவன் வழக்கமா போற கடை அப்டிங்கறதாலெ அவனுக்கு செம கவனிப்பு. சரி கொஞ்சம் விளையாடி பாக்கலாம்னு, அந்த கடையிலெ இருந்த்தவன் கிட்டெ..டினொசர் எஸ் ஐ ட்ரைனிங் பண்ணிட்டு இருக்கான். ட்ரைனிங் முடிச்சு இந்த ஏரியாவுக்குதான் எஸ் ஐ போஸ்ட்டுக்கு வரபொறானு..ஐயாவ நல்லா கவனிச்சா நீ அமொகமா தொழில் பண்ணலாம்னு அள்ளி விட்ருக்கான்..!கிளப்பி விட்ருக்கான். அவ்வளவு தான், அப்புற்ம் கவனிப்ப பாக்கனுமெ..! அடா..அடா.. சுண்டல் என்ன...முட்டை என்ன... சார்..சார் அப்டின்னு செம கவனிப்பு..! உள்ளபடி சொல்லனும்னா, ஒரு ரஜினி பட ரீலிஸ் அப்ப டினொசர் பொலீஸ்கிட்டெ அடி வாங்கி ஒரு செருப்ப தொலைச்சத தவிர அவனுக்கும் போலீஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! (இந்த மேட்டர் வெளிய தெரியகூடாதுன்னு எனக்கு டினொசர் ஒரு குவாட்டர் வாங்கி தந்து இருந்தான்..! என்ன பண்றது..சத்திய சோதனைன்னு வந்த்ட்டா எல்லாத்தையும் சொல்ல

சரக்கு மாஸ்டர்...! ஈமொ..!

Image
அடுத்து, எங்களுக்கு இந்த லாகிரி வஸ்துக்கள் எல்லாம் அறிமுகம் செஞ்ச அந்த படுபாதகன் பேரு, ஈமொ. பேர் விளக்கம் எல்லாம் சொன்னா தேடி வந்து செருப்பாலெயெ அடிப்பான். அதுனாலெ அவனை ஈமொ ன்னெ கூப்பிடுவோம். கள்ளுலெ ஆரம்பிச்சு, சிவன் வரைக்கும் அறிமுகம் பண்ணி எங்க வீட்லெ எல்லாம் விளக்கு எரிய வைக்க வச்ச படுபாவி இவந்தான்..! அவனை நான் முதல் நாள் பாக்கும்போதெ ஒரு டிஃபன் பாக்ஸ்லெ குவார்ட்டர் 30 ரூபா சரக்க ஊத்தி குடிச்சுட்டு இருந்தான். என்னா அவசரம் பாருங்க..! இவன் சீட்டு கட்டு விளையாட்னா , அந்த சகுனியெ தோத்து போய்டுவான். இவன் டெய்லி செலவுக்கெ சீட்டு விளையாடிதான் சம்பாதிக்கனும்னா பாத்துக்குங்களென்..! என்னா ஒரு உழைப்பு..! எப்டியும் ஒரு மூனு ஜோக்க்ர் ஒளிச்சு வைச்சு இருப்பான் பாடியிலெ..! இது தான் இவை டிக் அடிக்கிற சீக்ரெட்..! பாடம் புரியலையென்னு கொஞ்சம் கூட வெக்கபடாமெ அவனுக்கு என்ன தெரியுமோ அதையெ திரும்ப திரும்ப சொல்லி மனுஷன் உயிரயெ எடுத்துடுவான். சைக்கிள் டைனமோ எப்படி கரண்ட் ப்ரொட்யுஸ் பண்ணுதுன்னு, என்னொமோ இவனெ அதை கண்டு பிடிச்ச மாத்ரி சொல்லுவான். (ஹும்...பெரிய தொழில்நுட்பம் தான்..!) இவன் ஆளு அப்பாஸ் மாத்ரி இ

பிக்னிக் வித் பார்ட்டி

ஒரு செமஸ்டர் ரிசல்டில் எங்களில் ஒருவன் (பல வருடமாக ஒரே கிளாஸை டீஃபார் ஆகி படித்தவன்) வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்தான். கொஞ்சம் பணக்காரன் கூட. வழக்கம்போல் அவனை போட்டு பூஸ்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள் மெண்டலும் டினோசரும். இது கொஞ்சம் வித்தியாசமாக எப்படியென்றால் பிக்னிக் வித் பார்ட்டி. அதாவது அருகில் உள்ள காரைக்கால் சென்று மருந்து சாப்பிட்டு விட்டு வருவது. ஏற்பாடுகள் எல்லாம் ரெடி. அவன் ஜீப் எடுத்து வந்திருந்தான். சுமார் 10 பேர் என்று நினைக்கிறேன். காரைக்கால் புறப்பட்டு சென்றோம். நாங்கள் படித்தவர்கள் அல்லவா? முன்னேற்பாடுகள் எல்லாம் பக்காவாக ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது ஜீப்பை ஒட்டுவதற்கு ஒரு எக்ஸ்ட்ரா டிரைவர். ( ஏனென்றால் நாங்கள் ஃபிளாட்டானால் வண்டியை ஒட்டி வருவதற்காக.) மேலும் எங்கள் குரூப்பில் ஒருவன் சொந்த மெடிக்கல் ஷாப் வைத்திருந்தான். அவன் நிறைய மாத்திரை எல்லாம் எடுத்து வந்திருந்தான். ஏனென்றால் யாரும் வாமிட் எடுத்துவிடக்கூடாது என்று. பூஸ்ட் பார்ட்டி ஆரம்பம் ஆனது. வழக்கம் போல் எங்கள் மருத்துவர் ஐயா அதான் மருந்து மாத்திரை எடுத்து வந்தவன் தான் முதல் போனி, வாமிட் கம் ஃபிளாட் (

இவன் எவ்வளவு அடிச்சாலும் வாங்கறான்...இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா..ன்னு, சர்டிஃபிகெட் வேற..!

அந்த மலை ஏற்ற சம்பவத்துக்கு முன்னால், ரெண்டு முக்கியமான கேரக்டர்ஸ் பாத்துடுவோம். ஃப்ர்ஸ்ட் இயர் முடிஞ்சி எங்களை ஹாஸ்டல் விட்டே துரத்திட்டாங்க..! அதிலெ ஒண்ணும் ஆச்ச்ர்ய படுறதுக்கு இல்லை. நாங்களும் வெளிய ஜாலியா இருக்கலாமேன்னு வெளிய வந்து ரூம் போட்டோம் (வேற வழி..!) . அந்த ரூம் ஒனர் பேரு, கட்டை. சொந்தமா ஒரு மெஸ் வச்சி நட்த்திட்டு இருந்தார். அவரோட அண்ணன், ஒரு டீ ஸ்டால் நட்த்திட்டு இருந்தார். அந்த ரெண்டு பேர் கிட்டெயும் நாங்க வாங்கின அடி இருக்கெ. அடா..அடா..! அந்த மெஸ்சிலெ நடக்கிற அநியாயத்த தட்டி கேட்ட்துக்குதான் அவ்வளவு அடி..! எண்ணெயெ காட்டாத தோசை..காயெ இல்லாத சாம்பார், வீசி எறிஞ்சா மண்டை உடையற மாத்ரி இட்லி.. இந்த மாத்ரி கொடுமை எல்லாம் ப்சங்க என் தலைமைலெ தட்டி கேக்க ஆரம்பிக்க (என் பெர்மிஷன் எவன் கேக்றான்..!) அதுனாலெ, பாதி அடி நான் வாங்க வேண்டியதா போயிட்டு...! மோர்லெ உப்பு இல்லைனா கூட பச்ங்க என் பேர சொல்லி பிரச்னை பண்ண ஆரம்பிச்சு, அந்த கட்டைக்கு பயந்து நான் தென்னை மரத்திலெலாம் ஏறி பதுங்கும் படி எல்லாம் ஆகிபோச்சு. மெஸ் இருக்கிற் வீட்லெயெ ரூம் இருந்த்தாலெ போர் அடிக்கும் போதெல்லாம் வந்து அடிக்க

ஒரு மாலை இளவெயில் நேரம், அழகான இலையுதிர் காலம். சற்று தொலைவிலே

நாங்கள் எப்பொழுதும் காலேஜ் முடிந்ததும் மாயவரம் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்து ஸ்கூல் பெண்களை எல்லாம் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிவைக்கும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்திருந்தோம். ஒருநாள் எங்கள் கடமையை செய்துகொண்டிருக்கும் பொழுது பஸ்ஸ்டாண்டே ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் எங்களை துரத்த ஆரம்பித்தார்கள் அங்கிள்களும் ஆண்டிகளும். இதில் எனது நண்பர்கள் சிலருக்கு லத்தி அடி வேறு ( புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) கண்மூடி கண் திறப்பதற்குள் பஸ் ஸ்டாண்டே பளிச் என்று இருந்தது. இதில் எனது வாகணம் வேறு பஸ் ஸ்டாண்ட் உள்ளே மாட்டிக்கொண்டது. நானோ சிறிது தொலைவில் இருந்த விஜயா தியேட்டர் வரை தலை தெறிக்க ஒடி இருந்தேன் ( லோக்கல் பாய்க்கே இந்த நிலை). அந்த சமயத்தில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் வந்தார். நான் அவரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவருடன் சேர்ந்து கடை உரிமையாளர் போல் வேஷம் போட்டு பஸ்ஸ்டாண்ட் உள்ளே வந்தேன். அப்பொழுது நண்பர் கூறினார் காலையில் எவனோ ஒரு நல்லவன் ஒரு ஸ்கூல் பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதால் காலையில் இருந்தே ஒரே ரெய்டு என்று சொன்னார். சரி எனது நண்பர்கள்

மலை ஏற்றமும், மானபங்கமும்..!

அடுத்து, இந்த சரக்கு பார்ட்டி நடக்கும் போது, நடக்ற மனித உரிமை மீறல் இருக்கெ ( என் மேலதான்.. வேரு யாரு..!) அதை பத்தி பாப்போம். ஒரு மூனு பெக் வரைக்கும் தான் நான் என் இக்ஷ்ட படி இருக்க முடியும். நாலாவது பெக்குக்கு நான் டினொசர் கண்ட்ரோல் ல போயிடுவென். இதுக்காக, சமயத்திலெ நாலாவது பெக்கோட ஊருகாய் சகிதமா டினொசர் என்னை துரத்தின சம்பவம் எல்லாம் நடந்த்து இருக்கு. அவன் பாசத்தோட எனக்கு சரக்கு குடுக்றத பாக்ரவங்களுக்கு அப்டியெ புல்லரிச்ச்டும். அவங்களுக்கு தெரியுமா. ஆட குளிப்பாட்டி மாலை போட்றது ஏன்னு? என்னை வச்சு ஃபுட் பால் எல்லாம் கூட விளையாட்ருக்கானுங்கன்னா பாத்துக்கங்ளென். இந்த டினொசர் என்னக்குன்னு ஒரு மிக்சிங் போடுவான். எல்லாருக்கும், மூனு பங்கு தண்ணி மிக்ஸ் பண்ணா எனக்கு மட்டும் ஒரு பங்குதான் கலப்பான். இப்டியெ என்னை சீக்கிரம் மலை ஏத்தி மானபங்க படுத்த்றது தான், அவன் ஒரெ பொழுது போக்கு. அப்டி ஒரு சரக்கு போட்ட சம்பவத்த அடுத்து பாப்போம்..!

நாங்கதான், கேப்லெ கடா வேட்டுவோம்லே....!.

அடுத்ததா, ஹாஸ்டல் லெ ஒரு தீபாவளி லீவ். எல்லொரும் வீட்டுக்கு போரத்துக்கு முன்னாலெ, ஜாலியா வெடி வாங்கி வெடிச்சுட்டு போகலாம்னு ஐடியா பண்ணி, வசூல் பண்றதுக்கு நானும், டினொசரும் திட்டம் போட்டோம். வசூல் பண்றதுக்கு பசங்க கிட்டெ போய் பேசினா, அவனுங்களொ, வெணும்னா ஒரு டீ, சிகரெட் வாங்கி தரோம், இடத்தை காலி பண்ணுங்கனு, சொல்லி கேவல படுத்திட்டானுங்க. மனம் வெறுத்து போய், இந்த பயல்களுக்க்கும், ப்ரின்ஸ் கிட்டெ மாட்டிவிட்ட வார்டனுக்கும் பாடம் கற்ப்பிக்கதுன்னு முடிவு பன்ணொம். அப்பொ டினொசர், ஒரு மாஸ்டர் ப்ளான், போட்டான். (பாருங்க, திட்டம் எல்லாம் அவன் தான் போட்றான். பேர் மட்டும் எனக்கு..என்ன கொடுமை சார் இது..!) அந்த திட்டம் இது தான். 1. இருக்கிறதிலெ ஒரு பெரிய அணு குண்டா வாங்கிறது. 2. அதை ஒரு ஊது பத்திலெ தள்ளி ஒரு நூலாலெ கட்டி, ஊதுபத்தி பத்த வச்சு ஒரு முக்கியமான இடத்திலெ ஹாஸ்டல் லெ வைக்க வேண்டியது. ஊதுபத்தி எரிஞ்சிகிட்டெ வந்து த்ரி பத்தறதுக்கு 10 நிமிஷம் ஆவுறமாத்ரி செட் பண்ண வேண்டியது. 3. குண்டு வைச்ச கையொட நாங்க ரெண்டு பேரும் தனியா தனியா ப்ரிஞ்சு போய், வேற ரூமுக்கு போய் பசங்க கூட போய் சேந்துக்க வ

என்னா ஒரு வில்லத்தனம்..!

சரி, இப்போ நாங்க ப்ரின்ஸ்பால் கிட்டே மாட்ன மேட்ர பாப்பொம். என் அப்பா வெளிஊர் லெ இருந்த்தாலெ நான் எஙக பெரியப்பா வை வர சொல்லி இருந்தென். டினொசரும் அவன் சித்தப்பா வை கூப்டு இருந்தான். முதல்லெ நான் தான் ப்ரின்ஸ் ரூமுக்கு போனென். ப்ரின்ஸ் பரவாயில்லை. பெரியப்பா விட்ட ரைட் இருக்கெ, அதுக்கு , ப்ரின்ஸ் கிட்டெயெ நாலு அரை வாங்கி இருக்கலாம். ப்ரின்ஸ் சொல்ரார் பரவாயில்லை, விடுஙக , சின்ன பையன்னு, ஆனா பெரியப்பா சொல்ரார் இவன் சீட்ட கிழ்ச்சி வெளிய அனுப்புஙகன்னு. அட கொடுமை யென்னு, மன்னிப்பு கேட்டு, வெளிய வந்தென். இப்பொ டினொசர் டர்ன். சிருச்சி கிட்டெ மாப்பு, போய்ட்டு வா சந்தோஷமான்னு, அனுப்பி வைச்சேன். போனவன், ஒரு ரெண்டு நிமிஷதிலெ வெளியெ வ்ந்துட்டான். நான் , வொய் ப்ளட்? அப்ப்டின்னென். அவன் சேம் ப்ளட் ன்னு சொல்லு வான்னு பாத்தா, நோ ப்ளட் ன்னு சொல்லிட்டு போயிட்டான்..! எப்ப்டி டா மாமு, நீ மட்டும், தப்பிச்செனு கேட்டென். அப்ப்ரம், சொல்றான். அவன் கூப்டு வந்தவன் சொந்தெக்காரனெ இல்லையாம். எவனொ டீ கடை லெ நின்னவன, ஒரு குவாட்டர் வாங்கி தரென்னு சொல்லி கூப்டு வந்து இருக்கான். அந்த ஆளும், ப்ரின்ஸ் கிட்டெ நான் கண்டிக

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

நன்றி.. லோக்கல் பாய்! உன் போட்டோ வோட ப்ளாக் எழுதி, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் ஒரு லோடு லாரி மண்ண அள்ளி போட்டு போட்டு மூடிட்டே..! என் பரம்பரைக்கே கமிஷன் அடிச்சு பழக்கம் கிடையாது. அபேற்பட்ட வம்சத்லே வந்த நான் உன்கூட வந்தேன் பாறு? அஞ்சி ரூபா , பத்து ரூபா னாலும் நானும் டிநோசரும் கவ்ரவமா உழைச்சி வாழ்ந்தோம்..! என்னை ஆயிர கணக்குலே ஊழல் பண்ண வச்சி , என் கைய்ய கரை பட வச்சியே.. ! அந்த காசை ஒரு அனாதை இல்லத்துக்கு குடுக்கலாம்னு எவளோவோ உன்னை கெஞ்சினேன்.. ! ஆனா நீயோ, நாமலே ஒரு அனாதை, நம்மக்கு எதுக்கு மாப்பு இன்னொரு அனாதைன்னு, டயலாக் பேசி , ரெண்டு நாள்ள உக்காந்து ரெண்டு புல் நெபோலியன் குடிச்சியே...! நீயும் ஒரு மனுஷனா? ஹோடேல்ல உக்காந்து கிட்டு இருக்கிறதிலேயே காஸ்ட்லி பிரியாணி கொண்டு வா ன்னு சொன்னியே..? யாரு வீடு பணம்.. மாமு.. ? மனச்சாட்சி இல்ல உனக்கு? டவுன் பஸ்லே புட் போட் லே போற நீ , வரும் போது, ட்ரைன் லே பிரஸ்ட் கிளாஸ் லே வந்தியே.. ? அட , நான்தான் ஒரு வெகுளி பையன் , தெரியாம ஒரு ஐடியா குடுத்துட்டேன்.. நீ என்ன பண்ணி இருக்கனும்.? எடுத்து சொல்லி இருக்க வேணாம்டா மாப்பு. சொன்னியா? க

சத்தியவான்....... மெண்டல்

Image
வேறொன்றுமில்லை முன்பே சொல்லி இருந்தோம் அல்லவா நானும் மெண்டலும் வொர்க்புக் வாங்குவதற்காக சிவகாசி சென்று வந்தோம் என்று. அதன் உண்மை நிலவரம் தான் இது.( நண்பர்களுக்கு நான் எவ்வளவு நல்லவன் என்று தெரியபடுத்தவேண்டாமா) கிளாஸ் வாத்தியார் உங்களுக்கு அட்டெண்டன்ஸ் தருகிறேன் மற்ற மாணவர்களிடம் வசூல் செய்து சிவகாசி சென்று புக் வாங்கி வருமாறு கூறினார். இது போதாதா எங்களுக்கு உடனே அந்த பிராஜக்ட்க்கு பிள்ளையார்சுழி போட்டோம். மெண்டல் டைனோசரை விட்டு என்னிடம் வந்து ஐக்கியமானான்.( சனி யாரை விட்டது) பழைய புக்கில் அச்சிடப்பட்ட விலை 65ரூபாய். மொத்தம் 80 பேர்(18 பெண்கள் உட்பட்) கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். பணத்தை வசூல் செய்துக்கொண்டு சிவகாசி சென்றால் அங்கு புக்கின் விலை வெறும் 23 ரூ தான். (அச்சிட்ப்பட்டதோ 65ரூபாய்) மெண்டல் வேதாளம் சும்மா இருக்குமா? சூப்பர் ஐடியா கொடுத்தது. அதாவது மீதிப் பணத்தை எடுத்துக்கொண்டு நாம் குற்றாலம் போவோம். அங்கிருந்துவிட்டு பிறகு ஊர் போவோம் என்று. ஏன் லேட் என்று கேட்டால் புக் வர லேட்டாகிவிட்டது என்று சொல்வோம் என்றான். நான் தான் நல்லவனாயிற்றே எவ்வளவோ மறுத்தும் கடைசியில் ம

நம்ம கலை தாகத்த புரிஞ்சிக்க மாட்டேன்றங்கடா லோக்கல் பாய்..!

பாசகார பயல்களுக்கு, நாம் வந்த பாதையை திரும்பி பாக்கும் போது நமது கல்லூரி வாழ்க்கை ஸ்லம் டாக் மில்லினியர் ரேஞ்சுக்கு இருப்பதை பாக்க முடியுது. நீங்களும் வந்த பாதையை திரும்ப பாருங்க.. (அதுக்காக பைக்லே போகும் போது திரும்ப பாத்து டாதிங்க பா.) (அப்பாடா , கேப்லே எப்டி ஒரு மொக்க ஜோக் அடிக்கலாம்னு பாத்துட்டு இருந்தேன்..ஜோலி முடிஞ்சது.!) நம்ம கதை இன்னும் ஒரு குறைஞ்சது அம்பது ப்ளாக் எழுதலாம். ஆனா நம்ம ப்ளாக் , ப்ளாக் லிஸ்ட் பண்ற ரேஞ்சே லே இருக்குன்னு ஒரு வாசகி வருத்த பட்ருகாங்க. அதுனாலே நமக்கு இருக்கிறது மூணு சாய்ஸ் தான். ஒன்னு, இப்போ போற மாதரியே எழுதிட்டு போவனும். ரெண்டு எழுதறதே கொஞ்சம் அடக்கி வாசிச்சி டீசென்ட் ஆ எழுதணும், மூணு , இந்த கதை எல்லாம் அப்படியே ஊத்தி மூடிட்டு , கம்ப்யூட்டர் கட்டுரை எழுதணும். (பார்ரா.. லோக்கல் பாய் ...கூட்டம் களைய பாக்குது..!) இப்போ இருக்கிற வோட்டு , போலிங் ரிசல்ட் எனக்கு ஆப்பு வைக்கிற மாத்ரி இருக்கிற மாத்ரி இருக்கிறதாலே.. அதை அப்படியே ஊத்தி மூடிட்டு ( வெப் மாஸ்டர் ஆ இருக்கிறதுலே ஒரு வசதி இது..! ஹையா..! ) புது போலிங் நாளைக்கு போஸ்ட் பண்றேன். நண்பர்கள் , குறிப்பா

Me & My Daughter in Temple

Image

ஒரு சின்ன தன்னிறைவு விளக்கம்.

ஒரு சின்ன தன்னிறைவு விளக்கம். ஒரு வாசகி அவர்கள் , ப்ளாக் எல்லாம் படிக்க கூடிய தரத்தில் இல்லை என கமெண்ட் எழுதி இருக்கிறார்கள். முதலில் அவர்களின் கமெண்ட் போஸ்ட் செய்ததற்கு நன்றி சொல்லுவோம். அதோடு , நண்பர்கள் அல்லாதவர் களிடமிருந்து நாங்கள் கமெண்ட் வரும் என்று எதிர் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள் அனைவரும் கடந்து வந்த , அனுபவித்த நிகழ்வுகளை அதே விதமாய் பதிவு செய்யும் போது , இந்த மாத்ரி ஸ்லாங் தவிர்க்க முடியாத தாகி விடுகிறது. இருப்பினும் யாரயும் புண் படுத்த கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் பேர் கூட தவிர்க்கிறோம். முடிந்தவரை நாங்கள் கொஞ்சம் டிசென்ட் ஆக (கொஞ்சம் கஷ்டம் தான்) எழுத முயற்சிக்கிறோம். தொடர்ந்து கமெண்ட் எழுதவும் . கூடிய விரைவில், தினம் ஒரு திருக்குறள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் உங்களுக்கு என்று பிரத்யோக மாக எழுத முயற்சி செய்கிறோம். (சாரி. ப்ளாக் முடிக்கும் போது இப்டி எதாவது லந்து பண்ணி பழக்க மாகி விட்டது. மன்னிக்கவும்)

மை கிட்ஸ் ..! தே ஆர் ட்வின்ஸ்..!

Image
வினுமிதா & விஷ்வந்த்

அன்பான நண்பர்களுக்கு,

அன்பான நண்பர்களுக்கு, தமிழில் டைப் செய்ய இன்னும் தெரியாமல் இருக்கிறீர்களா, கவலையே வேண்டாம். NHM Writer என்ற Software ஐ download பண்ணி அதை கம்யூட்டரில் Install பண்ணுனால் நீங்கள் நினைக்கும் பொழுது எல்லாம் தமிழில் டைப் செய்யலாம். அதற்கான லிங்க்... http://software.nhm.in / Products/NHMWriter/tabid/55 / Default.aspx Note: Type செய்யும்பொழுது கீழே உள்ள Taskbar ஐ கிளிக் பண்ணி Alt + 2 செலக்ட் செய்துக்கொள்ளுங்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேர்ட் டாகுமெண்ட் ஒப்பன் பண்ணி பிறகு Alt + 2 செலக்ட் செய்து தங்கிலீசில் டைப் செய்யலாம். எ.கா.: அம்மா = ammaa , பிறகென்ன copy and paste தான். இனியாவது கமெண்ட்ஸ் எதிர்பார்க்கலாமுல்ல.. பாவமய்ய மெண்டல் இரவு கண் முழித்து அப்டேட் செய்கிறான்யா, இப்பொழுதாவது மதிங்கய்யா... அவனை(ரை). லோக்கல் பாய் ( படித்தவன் தான்)

சனி பொணம் தான் தனியா போவாதே..!

நான் மட்டும் ஒரு நாள் சனி கிழமை ரூம்லே தனியா படுத்து கிட்டு வாழ்கையிலே எப்டி முனேரலாம் அப்படி யோசிச்சு கிட்டு இருந்தேன். மணி ஒரு மூணு இருக்கும். ஹோலிவுட் படத்துலே எப் பி ஐ வரமாத்ரி மூணு வாத்தியார் ஒரு வார்டன் , பிரின்ஸ்பால் எல்லோரும் திடு திப்புன்னு உள்ளே வந்தாங்க. என்னடா இது மெஸ் பில் கூட கட்டிடமே ? அப்பரம் எதுக்கு வந்தாங்க ன்னு பாத்தா, நேர என் பெட்டிய ஓபன் பண்ணாங்க. உள்ளே இருக்கிறது எல்லாம் எடுத்து வெளிய போட்டாங்க. நானே ஆடி போயிட்டேன். வெளிய எடுத்த லிஸ்ட் இது தான். சிகரெட் பாக்கெட் (சத்தியமா இந்த மட்டமான பிராண்ட் டினோசர் தான் குடிப்பான், ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?) சீட்டு கட்டு ( எனக்கு ரம்மி யெ விளையாட தெரியாதுன்னு , என்னை எவனும் சேத்துக்க மாட்டனுங்க. ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?) பீடி கட்டு ( அதுவும் எவனோ ஒரு நாதாறி குடிச்சிட்டு அணைச்சு வேற வச்சிருக்கான்) நாலு அஞ்சு மேட்டர் புக் ( நாசமா போரவனுங்க , ஆடோக்ராப் போடற மாத்ரி எவனோ என் பெற வேற எழுதி வச்சிருகானுன்க்) பான் பாரக் பாக்கெட் ரெண்டு ( இது அந்த கும்போகொனதான் பங்க் வேலை தான் . அவன் பல்ல பாத்தாலே கண்டு பிடிச்சிடலாம

ஒரு அப்பாவியின் அழுகுரல்..!

வழக்கமா , எங்க கைலெ பத்து தேதி அப்புறம் பத்து பைசா இருக்காது. அதுனாலே நைட்லே பசங்க எல்லோரையும் கூப்டு பாட்டு , டான்ஸ் அப்படின்னு போட்டு வசூல் பண்ணுவோம். டினோசர் ரெண்டு மூணு பேரை செட் பண்ணி , ஒரு ரூபா , ரெண்டு ரூபா போட சொல்லுவான். அப்புறம் தான் எல்லோரும் பைசா போடுவானுக, கலெக்ஷன் எல்லாம் டினோசர் தான் பாத்துப்பான். சில சமயம் காபரே டான்ஸ் கூட போவும். அப்போ கலெக்ஷன் தூக்கும். நாங்க இந்த மாத்ரி கூத்து கட்றது வெளிய லீக் ஆக ஆரம்பிச்சது. எங்க பேர் டேமேஜ் ஆரம்பிச்சது. எங்க போனாலும் ஒரு அஞ்சி பெற என் பெற சொல்லி அவன் க்ருப் னு சொல்ல ஆரம்பிச்சானுங்க. பத்தாததுக்கு, நைட் பத்து மணிக்கு கரண்ட் போகும் போது என் பேரை சொல்லி கத்த ஆரம்பிச்சானுங்க, திங்க் பண்ணி பாருங்க, இருட்லே நாலு மூலை இலே இருந்தும் என் பேர் சொல்லி கத்தினா , வார்டன் வர சொல்லி முத்தமா குடுப்பாரு? மேல கம்ப்ளைன்ட் போய்டுச்சு. என் ரூமுக்கு ஒரு நாள் ரெய்டும் வந்தது. அந்த கொடுமையே அப்பரம் பாப்போம். !

அது என்னோமோ, அம்மாவாசை இருட்டுலே போனாகூட என்னை மட்டும் கரெக்டா கண்டு பிடிசிடுரனுக..!

டினோசர் போட்ட மாஸ்டர் ப்ளானுக்கு முன்னாலே, நாங்க எப்டி ஹோஸ்டேல் லே பிழைப்பு நடத்னோனு பாத்துடுவோம். சேந்த ஒரு வாரத்திலே நாங்க செவரு ஏறி குதிச்சு சினிமாவுக்கு போனதாலே , எங்களை சீனியர் எல்லாம் கட்டம் கட்டினானுங்க. வித விதமா ராகிங் பண்ணி என்னை ரூமிலேயே அடைச்சு வசிருந்தனுங்க. காப்பத்த ஒரு பய வரணுமே ? ஹுஹீம் . ..! கட்டி வச்சு அடிக்காத குறை தான். என்கூட சினிமா வுக்கு வந்தது யாருன்னு தான் அந்த விசாரணை. அது என்னோமோ, அம்மாவாசை இருட்டுலே போனாகூட என்னை மட்டும் கரெக்டா கண்டு பிடிசிடுரனுக. குருதி புனல் கமல் மாத்ரி என்னை ரூம்லே விட்டுட்டு போய்டனனுங்க. அப்பரம் தான் எல்லா சதியும் என் பேர்லே நடகிறதை புரிசுகிட்டேன். நான் பிரின்ஸ்பால் கிட்டே மாட்டின நாளும் வந்தது. அதை அடுத்து பாப்போம்..!

ஸ்காட்ச் விஸ்கி மட்டுமே (கொஞ்சம் ஓவரோ?) மட்டுமே குடிக்கிற எங்களை லோக்கல் சரக்கு குடிக்க வச்ச லோக்கல் பாயை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்.!

பாதிக்க பட்ட முறையில் லோக்கல் பாய் சொல்வது எல்லாம் பரிதாமா தான் இருக்கு. ஆனா சம்பவம் நடந்த அன்னைக்கு தர்மபுரம் ஆதினம் ஆர்ச் அருகில் ரோட்டிலேயே நாங்க ஃஃபிளாட். சைக்கிள் ஒரு பக்கம் இவர்கள் ஒரு பக்கம் கூஜா ஒரு பக்கம். அதெல்லாம் சரிதான். ஆனா சரக்கு பத்தமா அந்த கூஜாவா டினோசர் தான் உடைச்சான். வாங்கறவன் ரெண்டு கூஜாவா வாங்கி இருந்தா இந்த பிரச்சனை வருமா? ஸ்காட்ச் விஸ்கி மட்டுமே (கொஞ்சம் ஓவரோ?) மட்டுமே குடிக்கிற எங்களை லோக்கல் சரக்கு குடிக்க வச்ச லோக்கல் பாயை நாங்க கடுமையா கண்டிக்கிறோம். சரக்கு ஏடாகூட ஆகி பார்வை போயிருந்தா என்ன ஆவரது? டிநோசர்க்கு ஏற்கனேவே பாதி பார்வை தான். சரி. இப்போ ஸ்பான்சர் மேட்டருக்கு வருவோம். நான் முடிவு பண்ண ஸ்பான்சர் ஏற்கனவே பாதி நாள்தான் கிளாசுக்கு வருவான். அவன் ஊரு நெய்வேலி. அவன் நல்ல செஸ் விளையாடுவான். நான் அவன்கிட்டே டெய்லி போய் விளையாடி தோத்துட்டு வருவேன். (எப்போவாவது ஜெயிக்கிற மாத்ரி இருந்தா கூட பிளான் பண்ணி தோதுடுவேன்). அவன் ஒரு நாள் மாப்ளை இப்டி பத்து நாளா டெய்லி வந்து தோத்துட்டு போறியே.. உனக்கு வெக்கவே இல்லையானு ஒரு கேள்வி கேட்டான். நானும் மாம்ஸ் , நான் எ

லோக்கல் பாய் …….( ஒரு கூஜாவால் அசிங்கப்பட்டது)

மெண்டலுக்கும் டைனோசருக்கும் யாரும் மாட்டவில்லை என்றால் அவர்களின் பார்வை என் மீது தான். ஏனென்றால் நான் தான் லோக்கல் பாயாச்சே. ஒரு ஞாயிறு மாலை, இருவரும் சைக்கிளில் படையெடுத்து என்னை தேடி வந்தார்கள். முதலில் ½ கேட்டார்கள் இல்லை என்றதும் ¼ பிறகு நாட்டுச்சரக்கு வரை இறங்கி வந்தார்கள். என்னுடையே நிலையோ அப்பொழுது அவர்களிடம் சிகரெட் கேட்டு நின்றேன். அப்பொழுதுதான் மெண்டல் டினோசர் காதில் ஏதோ ஒதினான். அது வேறொன்றுமில்லை. என்னுடைய நண்பன் ஒருவன் நாட்டுச்சரக்கு மொத்தவியாபாரி அவனிடம் வாங்கிக்கொடு என்றார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் தான் வென்றார்கள். நண்பனிடம் இவர்களின் நிலையை விளக்கினேன். முதலில் மறுத்தான் பிறகு எங்களின் அரிப்பு தாங்கமால் , கலவை கலக்காத சரக்கை ஒரு கூஜாவில் கொடுத்து அதில் 10 மடங்கு தண்ணீர் கலந்துகொள்ளச்சொன்னான். அதை கலந்து குடித்தால் 10 நாள் மூன்று பேர் மூன்று வேளை வைத்து குடிக்கலாம். நண்பனோ மிகவும் கவணமாக எடுத்துசெல்லும்படியும் கூஜாவை நாளை கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லி அனுப்பினான். இவர்களும் மகிழ்ச்சியுடன் சைக்கிளில் கிளம்பிச்சென்றார்கள். அதான் குரங்கு அப்பம் தின்ற

இதுவும் ஒரு பொழப்பானு லோக்கல் பாய் கேப்பான். கண்டுக்கமே மேல படிங்க..!

வீட்டு கலயாணத்துக்கு கூப்ட்ரவனுக்கு எல்லாம் இந்த கல்யாணம் ஒரு பாடம் . வாங்கற சரக்க ரூம்லே வாங்கி குடுத்துட்ட , நாங்க ஏன் இப்டி நல்ல காரியத்து எல்லாம் போயி இப்டி பிளாட் ஆவணும். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா லெவெலுக்கு வர வேண்டியவனை இப்டி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆட வச்சது யார் குற்றம்.? சரி.. இப்போ ஸ்பான்சர் மேட்டருக்கு வருவோம். டினோசர் அடியாள் மாத்ரி இருந்ததாலே அவனுக்கு ஈசியா ஸ்பான்சர் கிடைச்சாச்சு. ஒன்னு இல்லை மூணு பேர். எனக்கு ஒர்த்தனும் கிடைக்கலை. டீ, சிகரட், சாப்பாடுன்னு செட்டில் ஆயிட்டான். அப்போ அப்போ என்னை பாத்து நக்கலா சிரிப்பு வேற. அப்போ தான் என் திறமை மேல எனக்கு சந்தேகம் வந்தது. ஆனா நம்பிக்கை மட்டும் இருந்தது. எனக்கு சரியான ஆள் ஒருத்தன் மாட்டினான். அதை அப்பரம் பாப்போம். ..! இதுவும் ஒரு பொழப்பானு லோக்கல் பாய் கேப்பான். கண்டுக்கமே மேல படிங்க..!

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்…

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்… இந்நண்பனை நாங்கள் எல்லோரும் ஜமுக்கு என்று தான் கூப்பிடுவோம். சும்மா பழம் மாதிரி இருப்பான். ( கொஞ்சம் அதிகமாக அளந்து விடுவான். எங்களின் வறுமை மற்றும் விதி பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை) அவன் எங்கள் எல்லோரையும் மதித்து அவன் சகோதரியின் கல்யாணத்திற்கு அழைத்திருந்தான். எங்கள் அமைச்சரவையிலும் எல்லோரும் போவதாக முடிவெடுத்து அவனிடமே பஸ்ஸிற்கு காசெல்லாம் வாங்கி ரெடியாகிவிட்டோம். சுமார் 10 அமைச்சர்கள் என்று நினைக்கிறேன். பரிசு பொருள் வாங்குவதற்காக வசூல் ஆனத்தொகை வெறும் 75 ரூபாய். அதிலும் டினோசர் கமிஷன் அடித்தான்.( என்ன ஒரு பிளய்ன் சிகரெட் இதற்காக எனக்கும் அவனுக்கும் சண்டை வேறு). எத்தனையோ கல்யாணத்தில் கலந்திருந்தாலும் இந்த கல்யாணத்தை எங்களால் மறக்கமுடியாது. அன்று பா.ம.க வினர் பந்த் அறிவித்திருந்தார்கள். சும்மாவே மரத்தை வெட்டுவார்கள் இதில் அவன் இருக்கும் ஊர் ஜெயங்கொண்டம் அவர்களின் கோட்டை வேறு. நாங்கள் பயப்படுவோமா, ஆம்பளை சிங்கமுல்ல… டிராக்டர் பிடித்து, லாரி மாறி, கொஞ்சம் நடந்து அந்த ஊர் போய் உயிருடன் சேர்ந்ததே பெரும்பாடாகி விட்டது. அவனது அப்ப

ரெண்டு ஓநாய் சேந்து ஒரு ஆடு அமுக்க்றதா கஷ்டம்..!

லோக்கல் பாயின் மன குமுறல் எனக்கு புரியுது . இவன் மாச மாசம் வீட்டுக்கு கூப்டு சாப்பாடு போட்டபயே எனக்கு டவுட். என்னை ஒரு டெமோ பீஸ் ஆக்கி நிவாரணம் வாங்கி இருக்கான். சரி , வாங்கினவன் என் பங்கை குடுத்தானா? அதுவும் இல்லை. இவன்கிட்டே எவளவு பணம் இருக்குன்னு நானும் டிநோசரும் பிளான் பண்ணி கண்டு பிடிப்போம். முதல்லே ,இன்னக்கு யாருன்னு முடிவு பண்ணுவோம். அப்பரம், டினோசர் போய் பின்னாடி நின்னு பாகெட் பாத்து ஊதுவான். பணம் எவளவு வச்சிருக்கான்னு, என்கிட்டே சொல்லுவான். ஆபேரஷன் கு பேர் கூட வைப்போம். முதல்லே நான் போய் சைகாலோஜிகால பேசி அவன் கிளாசுக்கு போற மூட மாத்துவேன். டினோசர் வழியிலே புளிய மரத்துலே வெயிட் பண்ணுவன். ஏன்னா , நான் ஒரு வேலை தோத்துட்டா , அவனை வழியிலேயே அமுக்குரதுக்கு. ரெண்டு ஓநாய் சேந்து ஒரு ஆடு அமுக்க்றதா கஷ்டம். அன்னைக்கு டீல் ஓவர். அப்போதான், எனக்கும் டிநோசருக்கும் ஒரு கவலை. இப்டி டெய்லி ஆள் பிடிக்கிறது கஷ்டமா இருக்கே. அதோட எல்லோரும் நம்மள பாத்தாலே தெறிச்சு ஓட்ரனுங்க. எத்தனை நாள் தான் நாம அன்றடங்காச்சி கால இருக்ரதுனு. ஒரு மாத்ரி யோசிச்சி ஆளுக்கு ஒரு ஸ்பொன்சர் பிடிச்சி நிரந்தரம

இதை படிக்கும் நண்பர்களுக்கு…..ஒரு எச்சரிக்கை…

தயவுசெய்து எல்லோரும் எதாவது எழுத முயற்சியுங்கள்….இன்னுமா ஏதும் எழுத கத்துக்காம அப்படியே புண்ணாக்கா இருக்கீங்க ( எப்படிடா மெண்டல் , இது போதுமா) இதற்கு டைனோசர் விதிவிலக்கு ( அவன் எழுத படிக்க தெரியாதவன் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ) நாகரீகம் கருதி இத்துடன் விடுகிறேன். Atleast Photo வாவது Followerல் போடுங்கப்பா…….…!) லோக்கல் பாய்

கொசு..!.….(கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதவன்)

கொசு..! எத்தனை காயில் கொளுத்தினாலும் இவனை மட்டும் கொல்லவே முடியலை..! கள்ளனை நம்பினாலும் நம்பலாம் ஆனால் ……………………நம்பக்கூடாது என்பார்கள் (சும்மா விளையாட்டுக்கு மாப்ள, கோவிச்சுக்காத) முகத்தை பாவமாக வைத்திருப்பான். எங்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பான். ஏனென்றால் அவன் அப்பொழுது வயதுக்கு வரவில்லை. (ஆனா பிஞ்சிலேயே பழுத்தவன்) பிறகு எங்களின் வீக்னஸை எல்லாம் தெரிந்துக்கொண்டு எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டவன். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அவ்வப்பொழுது சில நல்ல ஐடியாவும் குடுப்பான் ( எப்படி உருப்படாமல் போவது என்பதற்கு). என்னுடைய அழிவில் இவனுக்கும் பங்குண்டு. (நீ எங்க ஊரு மாப்பிள்ளை என்று சொல்லியே என்னைக் கவிழ்த்தவன்..) ம்.. மண்டையனையும், இவனையும் மறக்க முயற்சிப்பது நல்லது.. ஏனென்றால் இனியாவது நான் உருப்படுனுமுல்ல.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே…………..என்ன சொல்றீங்க நண்பா, லோக்கல் பாய்

மெண்டல்…. பெயர் விளக்கம்

மெண்டல்… . இந்தப்பெயருக்கு இவ்வளவு பொருத்தமானவன் இவனைத்தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. இப்பெயரை இப்பொழுது வரை கட்டிக் காப்பாற்றிவருபவன். இவனைப்பற்றி இங்கு சொல்லவில்லை என்றால் எனக்கு இந்த ஜென்மப்புண்ணியம் கிடைக்காமல் போய்விடும்… வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வாழ இவனிடம் தான் கற்றுக்கொண்டேன். யாரிடமும் எளிதில் பழகிவிடுவான். இயற்கையிலேயே வெள்ளை மனம் கொண்டவன். ( என் வீட்டில் இவனைக்காட்டி நிறைய பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்துள்ளேன். இவன் ஆதரவற்றவன். இவன் படிப்புக்கு நாங்கள் எல்லோரும் தான் உதவுகிறோம் என்று... அதற்காக இப்பொழுது அவனிடம் மன்னிப்புக்கோருகிறேன். ஏனென்றால் நான் ஒரு ஜென்டில்மேன்). அப்பொழுது ஜெண்டில்மேன், காதலன் போன்ற படங்கள் வந்த சமயம். ஒசியிலேயே படத்தை பலமுறைப்பார்த்து 2,3 ஸ்டெப் டான்ஸ் கற்றுக்கொண்டு, டேய் இதைப்பாரேன்..இதைப்பாரேன் என்று எல்லோரிடமும் ஆடி காண்பித்து உயிரை வாங்குவான். டைனோசர் இவனை உசுப்பேற்றிவிட்டு காலேஜ் புரோகிராமிலும் மேடையில் ஆடி எங்கள் வகுப்பில் உள்ள எல்லோரின் மானத்தையும் வாங்கினான். (அதே பாடலுக்கு ஒரு ஜூனியர் மேடையில் ஆடியதைப்பார்த்த பிறகு த

ஆகா ..வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. !

வாங்க.. கொஞ்ச காலம் பின்னாடி போவோம். (எத்தனை வர்ஷம்னு சொன்னாக்க வயசு தெரிஞ்சுடும்.. அப்பரம் இளம் ரசிகைகள் ஆதரவு கிடைக்காம போய்டும்..ஹீ ..ஹீ ) இந்த பிளஸ் டூ அப்டின்ற சுனாமிலே மாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு , ஒரு ஊரே அடிச்சு விரட்ட்ரே நிலைமைலே தான் பாலிடெக்னிக் லே சேந்தேன். உள்ளே வரும்போதே எப்டியாவது படிச்சி பெரிய ஆளு ஆகி காட்டணும்னு வந்தேன். மேன் ப்ரொபோஸ் ... பட் காட் டிஸ்போஸ் .. அப்டிங்கற பழமொழி அப்போ என்னக்கு தெரியாது. விதி டினோசரை வேற ஒரு என்ட்ரன்ஸ் வழியா உள்ள அனுப்பிருக்கு. அவனும், பிளஸ் டூ லே சிக்கி சின்னபின்னமாயி தான் வந்து இருக்கான் ..! இந்த 12B படத்திலே வரமாத்ரி , லைப் லே ரெண்டு ட்ராக் இருந்தாக்க , நான் அந்த மொமென்ட் கேட்ச் பண்ணி , வேற பஸ் பிடிச்சி கண் காணாம ஓடி போயிருப்பேன் . ரூம்லே பாத்தா இவன் சீனியர் மாத்ரி உகந்துக்கிட்டு , என்னை ஏன் லேட்டுங்க்றான் . எல்லா விசாரணைக்கு அப்பரம் , நானும் உன்னை மாத்ரி தான் , இப்போதா வந்த்தேன்ரான் . ஆகா .. வந்துட்டான்யா .. வந்துட்டான்யா .. ! ன்னு உள்ள குமுரிக்கிட்டு இருந்தேன் . ஓகே . கொஞ்சம் கேப் விட்

இந்த ப்ளாக் ஸ்பாட் வரலாற்றிலேயே ஒரு ப்ளாக் ஓனர் அவமான படுத்த படறது இதுதான் முதல் முறை..!

இந்த ப்ளாக் படிச்சுகிட்டு இருக்கிற நூற்று கணக்கான (சரி.. சரி.. அஞ்சு பத்து பேர்தான்..! ) நண்பர்களுக்கு, ஒரு செய்தி. கீழ இருக்கிற போஸ்ட், என்னாலையும் , டினோசர் ஆளையயும் பாதிக்க் பட்டவன் நாள போஸ்ட் செய்ய பட்டது. இந்த ப்ளாக் ஸ்பாட் வரலாற்றிலேயே ஒரு ப்ளாக் ஓனர் அவமான படுத்த படறது இதுதான் முதல் முறை. ஆனாலும், அந்த போஸ்ட்லே இருக்கிற நியாயத்துக்கு நான் கட்டு படறேன். (வேற வழி..!) . இது விஷியமா, டிநோசருக்கு எதாவது கருத்து இருந்தா அதை போஸ்ட் பண்ணலாம். நாங்க இப்டி ஒரு வழிபறி பன்றவங்களா மாறினதுக்கு என்ன சமூக காரணம், அது ஒரு பெரிய கதை. அதை சொல்றதுக்கு, கொஞ்சம் வரலாறை திரும்பி பாக்கணும். பாத்துடுவோம்.. !

டைனோசர் ரொம்ப நல்லவன்….(16வயதினிலே பரட்டை மாதிரி)

டைனோசர் ரொம்ப நல்லவன்………..(16வயதினிலே பரட்டை மாதிரி) எங்கள் குரூப்பில் எல்லோருமே காதல் ரோமியோக்கள் தான் (டைனோசரை தவிர..ஏனென்றால், எந்த பெண்ணும் அவனை பார்த்தால் பயப்படும், கண்டபடி கிண்டல் பண்ணுவான் (எதுவும் மாட்டாத பொறாமையில்)). அவன் செய்வதெல்லாம் சரி என்பது போல் மெண்டல் பயலும் அவனின் ஸ்பான்சர்சிப்பிற்காக ஜால்ரா அடித்துக்கொண்டு அலைவான். மெண்டல் பய சிரிப்பழகி சினேகாவிடம் கடைசியில் கவிழ்ந்தது தனிக்கதை. அதை பிறகு பார்ப்போம். நாங்கள் கல்லூரி வளாகத்தில் நடக்கும்பொழுது எதிரில் வரும் எங்களின் தோழிகளை டைனோசரின் கிண்டலிலிருந்து எப்படி காப்பாற்றுவோம் தெரியுமா? ஒரு டீ மற்றும் சிகரெட் டைனோசருக்கு லஞ்சம் கொடுத்து தான். ஹூம், இப்படி அப்பாவிகளை மிரட்டி வாழ்ந்ததெல்லாம் ஒரு வாழ்க்கையா? நினைவுகள் மற்றும் வயிற்றெரிச்சல்கள் தொடரும்……..

மானம் உள்ளவங்களா இருந்தா எப்பவோ தூக்கு போட்டு இருப்பானுங்க. நாங்களா இருந்ததால பொழச்சோம்...!

அடுத்து எக்ஸாம் டைம். நைட் எல்லாம் கண்ணு முழிச்சு படிக்கிற பசங்க எங்களை பக்கத்லேயே சேத்துக்க மாட்டனுங்க. இவனுங்க மட்டும் படிக்கும் பொது எங்களுக்கு மட்டும் எப்டி தூக்கம் வரும். சிகரெட் முடியிற வரைக்கும் படிக்கிற மாத்ரி சீன் போட்டு காலைலே எக்ஸாம் கு போவோம். நான் மூணு யூனிட் படிசிட்டேனு டினோசரும், டினோசர் நாலு யூனிட் படிச்சிட்டானு நானும் கிளப்பி விடுவோம். பசங்க காலைலே எங்ககிடே வந்து முக்கியமான கொஸ்டின் ஒன்னு சொல்லு மாப்ளைன்னு கெஞ்சு வராங்க. நாங்களும் கிளி சீட்டு எடுக்கிற மாத்ரி ஏதோ ஒரு கொஸ்டின் எடுத்து கொடுப்போம். இவனுங்களும் அதை நம்பி படிப்பானுங்க.. அப்பரம் எக்ஸாம் ஹால் படிச்சது எல்லாம் மறந்துட்ட மாத்ரி டென்ஷன் லே இருப்போம். நம்ம அவஸ்தை பாத்துட்டு வாத்தியார் பெல் அடிச்சா கையோடு எங்களை பேப்பர் வாங்கிட்டு அனுப்புவார். இப்போ ப்ராப்ளெம் என்னன்னா வெளிய்லே வர பசங்க கொஸ்டின் பேப்பர் கஷ்டமா இல்லை ஈசியானு கேட்டா என்ன சொல்றது. நான் ஈசினும், டினோசர் கஷ்டம்னும் சொல்லி சமாளிப்போம். ஏன்னா பேப்பர் குடுக்கும் போது, இந்த பொண்ணுங்க எல்லாம் லைட்ட சிரிப்பாங்க மார்க்க கேட்டு. மானம் உள்ளவங்களா இருந்தா எப்ப

தியேட்டர் க்கு வெளியிலே சூர்யா தேவா ன்னு டயலாக் பேசினதை கேட்டு ஏமாந்துட்டேன்

இப்போ சொல்ல போறதும் ஒரு மானங்கெட்ட சம்பவம் தான். ஒரு முறை நானும் டினோசரும் சினிமாவுக்கு போனோம். இப்போவும் டினோசர் தான் ஸ்பொன்சர். படம் ஆரம்பிக்க அரைமணி நேரம் முன்னாலேயே போய் கவுண்டேர்லே நின்னு பேசிட்டு இருந்தோம். (வெளிலே இருந்து மட்டும் என்ன கிழிக்க போறோம்). நல்லாத்தான் பேசிட்டு இருந்தோம். கரெக்டா பெல் அடிச்சு டிக்கெட் வாங்கும் போது டினோசர் மட்டும் ஒரு டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போய்ட்டான். நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். எனக்கு இந்த மாத்ரி செருப்படி பழகினதலே டிக்கெட் குடுக்கிறவன் கிட்டே , நண்பன் சும்மா இப்டித்தான் எதாவது ஜாலிக்காக பண்ணுவான் பாருங்க இப்போ வந்துடுவான் சொல்லிட்டுஇருந்தேன். அவனும் அஞ்சி நிமிஷத்து அப்பரம் வந்தான். நான் டிக்கெட் குடுகிரவன் கிட்டே , நான் சொன்னேன் இல்லன்னு சொல்லிட்டு இருந்தேன். வந்தவன் அவன் கிட்டே இவனை யாருனே எனக்கு தெரியாது, உள்ளே விடாதிங்கனு சொல்லிட்டான். A அப்புறம் கடுப்பு ஆயி தியேட்டர் லேருந்து வெளியே வந்து ... அதான் இல்லை, சும்மா கெளரவம் படத்திலே வர சிவாஜி மாத்ரி மெய்ண்டைன் பண்ணி வெயிட் பண்ணேன். அப்பரம் பாத்து நிமிஷத்து அப்பரம் வந்து டிக்கெட் எடுத்தான்.

ஜெனரல் நாலேட்ஜ் உள்ள எல்லாருக்கு வர சோதனை தான்..!

ஒரு முறை எக்ஸாம் டைம். ஒரு குறிபிட்ட சப்ஜெக்ட் பத்தி நான் அதிகம் தெரிஞ்ச மாத்ரி பேசிட்டு இருந்ததினலே, பசங்க எல்லாம் என்னை சொல்லி குடுக்க சொன்னாங்க. நானும் என்னடா அவசர பட்டுடோமே, புக் வேற இங்கிலீஷ் லே இருக்கேன்னு , கவலை பட்டு இருந்தேன். அப்புறம் தான் இந்த கும்பலுக்கும் இங்கிலீஷ் தெரியாதுன்னு மைண்ட் குள்ளே ஒரு பப்ல்ப் எரிஞ்சது. சரி ன்னு என் சொந்த சரக்கு எல்லாம் மிக்ஸ் பண்ணி சமாளிச்சு சொல்லிகுடுத்ரிந்தேன். அனா இந்தே டினோசர் மட்டும் என் பக்கதிலே வரலை. அவன்தான் என் மூளை வளர்ச்சியே நோட் பண்ணிகிட்டே இருகானே. என் சரக்கு அவனுக்கு தெரியாதா? எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட் வந்துடுச்சி. எல்லாரும் பாஸ் , நான் மட்டும் அவுட். . வெளிய்லே தலை கட்ட முடியலை. சரி ஜெனரல் நாலேட்ஜ் உள்ள எல்லாருக்கு வர சோதனை தாணு மனசை தேத்திக்கிட்டேன்.

ஒரு அரை மணி நேரம் தியானம் முடியுதா இந்த உலகத்திலே?

அடுத்து, டினோசர் தான் .. வேற யாரு. க்ளாஸ்லே நடத்தறது எங்க எனக்கு புரிஞ்சிடுமோ னு .. பக்கதிலே உக்காந்து எனக்கு எதுவும் புரியமா பாத்துக்குவான். எங்களுக்கு அப்போவே தியானம் பண்ண தெரியும். அட நடத்தறது புரியாம நைசா தூங்கறத தான் அப்டி சொல்றேன். அப்பதான் ஒரு நாள் நான் தியான நிலைய லே இருக்கும் போது வாத்தியார் யாரையோ பொதுவா ஒரு கேள்வி கேட்டு இருக்கார். இந்த டினோசர் யாருக்கும எந்த தொல்லையும் பண்ணமே தூங்கிகிட்டு இருந்த என்னை எழுப்பி விட்டுட்டன். மாப்பிளை உன்னை கூப்ட்ருரர்னு. நானும் என் தியானம் கலைஞ்சி சார் கூப்டிங்களனு கேட்டு தொலைஞ்சிட்டேன். அவரு நிலை குலஞ்சி போய் சமாளிச்சு கிட்டு ஒரு கேள்வி கேட்டார். எனக்கு வழக்கம் போலே பதில் தெரியலை. (முழிச்சிகிட்டு இருந்தா மட்டும் தெரியவா போவுது). என் தியானம் கலைச்ச டினோசருக்கும பதில் தெரியாதம். பாருங்க என்னா க்ளோசா வாட்ச் பண்ணி இருக்கான் என்னை. ஒரு அரை மணி நேரம் தியானம் முடியுதா இந்த உலகத்திலே?

நல்லா கிளபுரங்க பா பீதியே..!

அடுத்து..மறுபடியும். டினோசர் தான், அவனுக்கு மெயின் வேலையே என் திறமைய வெளிலே எடுத்து வந்து என்னை கௌரவ படுத்தறதுதான்.. என்னா பாக்ரிங்க.. ஏத்திவிட்டு வேடிக்கை பாக்ரதைதான் தான் இப்படி சொல்றேன். ஒரு முறை பஸ் லே கடைசி சீட் லே உட்காந்த்து போனோம். அப்டி போகும் போடு என் பகத்திலே ஒருத்தர் நல்ல தூங்கி கிட்டு இருந்தார்.. டினோசர் நைசா என் கிட்டே பக்கதிலே தூங்கிகிட்டு இருக்கிறவர் பாக்கெட் லேருந்து பேனா எடு மாப்ளைன்னு சொன்னான். நான் மாப்ளை அது திருட்டு டா னு சொன்னேன். அதுக்கு அவன் சொன்னான், மச்சி பாக்கெட் லேருந்து பணம் திருடினதான் அது திருட்டு. பேனா எடுத்தா அது டைம் பாஸ் மச்சினு ஒரு புது தியரி சொன்னான். நானும் குழம்பி போயிட்டேன். ஆனா அந்த தியரி எனக்கு பிடிச்சிருந்தது. அப்பரம் நானும் அந்த ஆள் மேல தூங்கி விழுகிற மாத்ரி நடிச்சி..பல்லால கடிச்சி பேனாவ எடுதுட்டேன். அப்பரம் அந்த டினோசர் தியரி எ மாத்தி பப்ளிக்லே எப்டி திருடினாலும் த்ரிட்டு த்ரிட்டு தான் தியரி யை மாத்திட்டன். அது மட்டும் இல்லாம தூங்கற வரை எழுப்பி நான் பண்ண வேலை யை சொல்ல போறேன்னு சொல்லிட்டன். அப்பரம் என்னா,...புட் போட் லேருந்த் கு

இவனல்லவோ கொள்கை குன்று .!

இன்னொரு நண்பன், அவனக்கு டீச்சர் புருஷன்னு பேரு. இவனக்கு இந்த பேரு இருக்குன்னு.. அந்த டீச்சேரோட புர்ஷனுக்கு தெரியாது.. புரிசுருக்கும் நு நினைக்கிறேன். அவன் எங்களுக்கு தெரிஞ்சு பஸ்லே டிக்கெட் எடுத்ததே கிடையாது. எந்த டௌபுட் வராமே இருக்க . டிரைவர் , கண்டக்டர் கிட்டேயே போய் பேசிட்டு இருப்பான். அப்டியே டிக்கெட் எடுதிங்கலனு கேட்டா , எதோ ஒரு பஸ் பெற சொல்லி தான் அங்கே வேலை பாகிறேனு சொல்லிடுவான். ஒருமுறை, எட்டு பொண்ணுங்க (எங்க கிளாஸ் மேட் தான்) இவன்கிட்டே பைசா குடுத்து டிக்கெட் வாங்க சொல்லிருகங்க. இவன்தான் வாழ்கையிலே டிக்கெட் எ எடுக்க மாட்டேனு தாதாகிட்டே சத்யம் பன்னிஇருகானே. வழக்கம் போலே பைசா வாங்கி பாக்கெட் லே போட்டுட்டு வந்து இருக்கான். செக்கெர் வந்து எல்லாரும் மாட்டி கிட்டாங்க. இவன் எப்டியோ எஸ்கேப் ஆயிட்டான். மத்த பொண்ணுங்க எல்லாம் பைன் கட்டிட்டு கிளாஸ் கு வந்தாங்க.. ஏற்கனவே எங்களை ரொம்ப மதிபாங்க . இப்போ கேக்கணுமா..? இவனல்லவோ கொள்கை குன்று .! இவன் எங்களுக்கு எப்போவுமே.. ஒரு உதாரண (கள்ள) புர்ஷன் தான்

இன்றைய நீதி. காதல் தூது போய்ட்டு வந்து குடிங்கப்பா..

அடுத்து ஒரு லவ் ஸ்டோரி, நண்பன் ஒருவன் ஒரு பொன்னு லவ் பண்ணான். கிளாஸ் மேட் தன.. ரொம்ப சீரியஸ். எவளவோ பேச ட்ரை பண்ணி இருக்கான். முடியலை.. இன்னொரு நண்பனை கூப்டு நீதான் மாப்பிளை பேசி அந்த பொன்னு சம்மதிக்க வைக்கணும்னு சொல்லி இருக்கான். எவனோ ஒரு பேமானி கள்ளு குடிச்சுட்டு போன பொன்னு கிட்டே தைரியமா பெசல்ம்னு சொல்லி இருக்கான். இவனும் ரெண்டு லிட்டர் கள்ளு குடிச்சுட்டு. (ஏற்கனவே ஆளு சும்மா அய்யனார் கணக்கா இருப்பான், இதுலே கள்ளு வேற ..கைலே அருவா ஒன்னு இல்லாத குறை). போய் பேசி இருக்கான். .என்னா பேசன்னு அவனுக்கே தெரியலை யாம். மறு நல்லேன்ருது ..அந்த பொன்னு அவனுக இருக்கிற பசங்க இருக்கிற பக்கம் கூட தலை வச்சு படுக்கலை. இவளதுக்கும் அந்த பொன்னு ஐயர் பொண்ணு. ரெண்டு லிட்டர் ஓசி கள்ளு க்கு ஆசை பட்டு காதலுக்கே சமாதி கட்டித்தான். அப்பரம் லவ் பண்ண நண்பன் சோகாதில கள்ளு கடைலயே பழி கிடந்தது வேற கதை.

எத்தனையோ அவமானம், அதிலே இது ஒரு அவமானம்னு.. போய்டே இருபோம்லே

மறுபடியும் டினோசர் கதை தான் , வழக்கமா சினமாவுக்கு கூப்டு போறவனுக்கு கூட போற அல்ல கைங்க சர்வீஸ் பண்ணனும். நானும் அப்படித்தான் தோளே தூக்காத குறையா என் ஸ்பான்சருக்கு எல்லா வேலையும் செஞ்சேன். ஒரு குறையும் வக்கலை. நல்லாத்தான் போயிட்டு இருந்தது. பஸ் ஸ்டாப்லே புஸ்க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம் பஸ் வருதா , பஸ் வருதா அப்படின்னு பாத்து சொல்லிட்டே இருக்கனும் , அப்டியே லாரி வந்தாலும், அண்ணே லாரி வருதுனே அப்டின்னு பாத்து சொல்லணும். நானும் ஓசி சினிமாவுக்காக அந்த கொடுமைய பொறுத்து கிட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். கடைசியா பஸ் வந்தந்து. திரும்பி பார்த்தா என் ஸ்பொன்சர் தெறிச்சு ஓடிகிட்டு இருக்கான். அப்பரம் ஹச்டளுக்கு வந்து பாத்தா. நான் ஸ்போன்சர்னு நினைச்சிகிட்டு இருந்தவன்கிட்டயயும் பணம் இல்லையாம். அவன் காலையிலேர்ந்து ஒரு ஸ்பொன்சர் கு ட்ரை பண்ணி இருக்கான். . . கிடைக்காத விரக்தியலே என் கூட விளையான்றுக்கன். என்னா ஒரு கொல வெறி. சரி எத்தனையோ அவமானம், அதிலே இது ஒரு அவமானம்னு.. போய்டே இருபோம்லே..

இது மாதரி சொல்லிட்டு அடிச்சாக்கா ..நமக்கும் டைம் மிச்சம் இல்லையா..!

அப்பரம் ஒரு டப்பிங் படம்... அக்காபுருஷன் னு பேரு (பேர சகிக்கலை இல்லை..). இந்த டினோசர் நண்பன் பண்ண தொல்லையிலே படத்துக்கு போனோம். அந்த படாத படத்துக்கு.. பழைய செருப்ப எடுத்து.. நம்மாலே அடிச்சிக்கலாம். மாப்ளை..என்னடா பண்றது..இருந்த அம்பது ரூபாயும் செலவு ஆயிட்ச்சி மாப்ளை..னு கவலை பட்டுத் வந்தோம்.. அப்போதான் டினோசர் ஒரு ஐடியா குடுத்தான்.. நேர ஹாச்டளுக்கு போய், படம் ஆகா ஓகோனு இருக்கு.. இன்னைக்கே அந்த படம் கடைசின்னு ..கொலுதீ போட்டுடோம். அன்னைக்கு நைட் இருபது பேரு வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு போய் பாத்துட்டு... வந்து... அப்பரம்.. என்ன.. அதன் உங்களுக்கே தெரியுமே.. போர்வை போட்டு அடிச்சதன்லே எதனை பேர்னு தெரியலை.. லாங் ஜர்னி பஸ்லே போகும் பொது.. உடம்பு வலி வரதில்லையா.. அது மாத்ரி நினைச்சுக்க வேண்டியதான்

இதுவும் ஒரு வெ(க)ண்ணீர் கதை தான்..

அதே மாத்ரி இன்னொரு சம்பவம், நியூ இயர் பார்ட்டிக்கு காரைக்கால் போய் சரக்கு வாங்க என்னையும்..அந்த டினோசர் இருப்பானே..அவனையும் என்னையும் அணுபிணங்க. (காரைக்கால் சரக்கு கொஞ்சம் சீபா இருக்கும்) நாங்க திருந்திட்டோம்இனிமே தப்பு செய்ய மாட்டோம்னு சொல்லிட்டு கிளம்பினோம். நானும் நண்பன் கிட்டே..இந்த தடவை..நம்ம நாணயத்தை காமிக்கணும் டா மாப்பிளை னு சொல்லிட்டு. கொஞ்சமா சாப்டோம். அதோட வந்து இருக்கலாம்.. மாப்ளை இதிலே..செக் போஸ்ட் இருக்கு. நாம தைரியமா இருக்கணும்னா இன்னும் கொஞ்சம் சாப்டோவோம்னு சொன்னான் என் நண்பன். நானும் நம்பி ரெண்டு பெக் போட்டேன்..ரெண்டு நாலு ஆயி.. எட்டு ஆயி வழியிலே எதோ ஒரு பஸ் ஸ்டாப் லே இறங்கி படுத்த்டோம். காலையிலே பாத்த..ரெண்டு ஆடு படுத்த்துரிக்கு பக்கத்திலே..வாங்கின சரக்கு லே பாதி நாங்களே சாப்டுடோம்.. அப்பரம் என்ன கைபுள்ளைக்கு நேர்த்த கதைதான்.. இந்த முறை..வேன்னிரோட..பெய்ன் கில்லேரும் தேவை பட்டது..

வென்னீர் போட்டு குளிச்ச எல்லாம சரியாய் போய்டும் லே...!

அப்பரம் இன்னொருத்தன் ..நம்மள மாதரியே.. (வந்து சேருது பாருங்க..) ஒருமுறை. வாத்தியார் ஒருத்தர்..எல்லாரும் கட்டாயம் வொற்க்புக் வாங்கனும் , அதுவும் அந்த புக் சிவகாசி லே தான் கிடைக்கும். யாராவது பொறுப்பா போயிட்டு வாங்கனும் யாரு போறீங்க னு கேட்டார். நானும் என் நண்பனும் முகத்த பாவமா வச்சிட்டு நினோம். அவரும் நம்பி எங்களை வசூல் பண்ண சொல்லி போக சொன்னார். நாங்க போய் ரூம் போட்டு செலவு பண்ணிட்டு ரெண்டு நாள் அப்பரம் பொக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தோம். எல்லாருக்கும் குடுத்தாச்சு.. கடைசியா வாத்தியார் எல்லாரும் வங்கிட்டிங்கள னு கேட்டு..வங்கதவங்க நில்லுங்க னு சொன்னார். என்ன நடந்துற்க்கும் னு சொல்லுங்க...? நின்னது நானும் சிவகங்கை போய்டு வந்தவனும்தான். நீங்க எல்லாம் ஏன்டா உயிரோட இருங்கிங்கனு ஒரு பார்வை பத்தாறு பாருங்க.. அப்பரம் என்ன எல்லாம் உள் காயம்.. வென்னீர் போட்டு குளிச்ச எல்லாம சரியாய் போய்டும் லே...!

ப்ளாக் க்கான சரித்திர பெயர் காரணம்..

நியாயமா இந்த ப்ளாக் நாமே மணிடுமணி தான் இருந்து இருக்கணும். அப்புறம் என்ன.. நானே எழுதி நானே எத்தனை நாள் தான் படிக்கிறது. ஆனா ஒரு மாசத்திலே இந்த ப்ளாக் மணிடுமேனி நு மாத்தி காமிக்கிறேன். இல்லென தெலுங்கு கத்து கிட்டு அதிலே ட்ரை பண்ண வேண்டியதன்.. என்ன கால கொடுமைடா.. இது..!

ஜம்முக்கு பார்ட்டி

அடுத்து..எல்லா செட்லேயும் இருக்கிற ஜம்முக்கு பார்ட்டி. எதையுமே எக்ஸ்ட்ரவ தன் சொல்லுவான். கல்லு தோசை சப்டகூட.. கி ரோஷ்டுனு சொல்லுவான்.. அவங்க அப்பா வந்த வாடகை காரை கூட.. சொந்த கார்ன்னுசொல்லிட்டன். பணம் எப்போ கேட்டலும் குடுப்பன்.. எவளவு குடுத்தான்னு நினைவு இல்லை.. திரும்பி நான் குடுத்ததவும் நினைவு இல்லை. ஹிஹி .. இதுக்காக அவன் ஜம்ம்கு எல்லாம் பொருத்துக்கிட்டோம்.... அவன் கிட்டே எங்களுக்கு பிடிச்சது...அவன் செயின் தான். அது தெரிஞ்சு.. அவன் கழுத்து பட்டன் போடு தான் வருவான்..

அவன் ரொம்ப நல்லவன்...!

அடுத்து.. ஒரு கும்பகோணம் நண்பன் ..ரொம்ப நல்லவன்.. காந்தி ஜெயந்தி கு மட்டும் குடிக்கவே மாட்டான் . ( என்னா ஒயின் ஷாப் அன்னிக்கு லீவ் ) . ஒருமுறை ஒயின் ஷாப் லே சண்டை வந்து..ஆன பிறகு .. பாத்த அவன் சண்டை போட்டது.. அவன் அப்பகிடே .. என்ன ஒரு தெளிவான குடும்பம்.. அப்பரம் மகனும்..அப்பாவும்.. சேந்து.. வீட்டு போனங்கலம். வெத்தலை பாக்கு போடறது.. சுருட்டு பிடிக்கறதுன்னு ..அவன் சொல்லிக்குடுத்த நாகரிகம் இருக்கே. அட அட அட.. டோடல் விலேஜ் விடுதுக்குள்ளே வந்த மாத்ரி.. குடிதண்ணிர மிச்சம் பிடிக்கிறேன்..நு விஸ்கி கூட அப்படியேதான் குடிப்பன்.. அவன் ரொம்ப நல்லவன்...!

நானும் எவளவு நேரம் தன் வலிக்காத மாதரியே நடிக்கறது..!

அடுத்து.. சென்னை சேந்த ஒரு நண்பன்..(இப்போ எங்கேன்னு தெரியலை) . சரியான படிப்பாளி. (விதி அவனை என் ரூமு க்கு விட்டுடிச்சு..) நானும் அவன்கிட்டே படிக்கற பையன் மாதரியே நடிச்சேன்..(அந்தே மாத்ரி நடிக்கிற கஷ்டம் இருக்கே.. அந்த கொடுமைக்கு படிச்சிடலாம்..) அவனும் ரொம்ப ஹாப்பி எ என் கூட செந்துக்கிட்டன். அப்பரம் ஒரு செமஸ்டர் ரிசல்ட் க்கு அப்பரம் என்னை ஒரு கரப்பான் பூச்சி மாத்ரி பதான்.. அப்பரம் தான் நான் படிக்கிற பசங்க அலர்ஜி நு புரிசுக்கிட்டேன்.. நானும் எவளவு நேரம் தன் வலிக்காத மாதரியே நடிக்கறது..!

சனி யாரை பிடிக்கும்னு சொல்ல முடியாது.

அடுத்து.. நண்பர்களை.. பற்றி.. எல்லோரும்..நல்ல நிலைமைலே இருக்கானுங்க. சோ பேர் சொன்னாக்க செ..... லே அடிப்பானுங்க. முதல்ல நான் நடுதெருவில அரியர்ஸ் ஓட நிக்க காரணமா இருந்த கனவான் பத்தி சொல்றேன்..ஏழு அடியிலே டினோசர் மாத்ரி இருப்பான் ( டினோசர் ...க்கு மூளை சின்னதுன்னு.. அப்புறம் தான் நம்பினேன்..) என் வாழ்கையே.. நாசா மாகிட்டான். (அவனும் இதே மாற்றி சொல்லிருக்கான்) முதல்ல என்ன ஓசி சிகரட்டுக்கு என்னை அடிமை ஆக்கி அப்பரம் என்னை பாக்கெட் பாக்கெட்ஆ வாங்க வச்சிட்டான். அவன் பண்ண கொடுமைய.. ஒரு எபிசொட்லே சொல்ல முடியாது.. அப்புறம் பாப்போம்

ஒரு விசிட்டர் பிடிகிரதுக்குலே கன்னகட்டுதே..!

நன் கஷ்டபட்டு கன்வின்ஸ் பண்ணி ஒரு விசிட்டர் தயார் பண்ணி இருக்கேன். (அவங்க தலை எழுத்து இதை படிக்கனும்னு..) தெறிச்சு ஓடாம இருந்த சரி. அப்பா ...ஒரு விசிட்டர் பிடிகிரதுக்குலே கன்னகட்டுதே..!

கந்தசாமி... நொந்த சாமி ..!

முன்னூறு ரூபா குடுத்து கந்தசாமி பாத்தேன். கொடுமைடா சாமீ. சிவாஜி பார்ட் டூ ன்னு போட்டுருக்கலாம். தலை வலி. எட்டு பாட்டு பேஜார் மாமு.கந்தசாமி மெக்சிகோ லே கண்ணை கட்டி பைட் பண்ணும் போது நம்ம கண்ணையும் கட்டி விட்ட மாத்ரி இருக்கு.கருப்பு பணத்த வெள்ளை பஸ்லே கொண்டு போறதுதான் புதுசு.

எவனுமே எட்டி பாக்காத ப்லாக்

இந்த வர்ஷத்தில எவனுமே எட்டி பாக்காத ப்லாக்.. ஹி ஹி ..நம்மலோடதான்நானும் இந்த ப்லாக் இட்லிவடைப்லாக் ஸ்போட் .காம் மாதிரி கொண்டு வரணும்தான் பாக்கிறேன். பாப்போம்..

நானும் என் நாசமா போன என் ப்ளாகும்

ஹலோ ... old friends க்காக ஆரம்பிச்சேன்.. ஒரு பய எட்டி பாக்க மாட்டேன்கரன்.நானும் என்ன எழுதி தொலக்கிரதுன்னு தெரியலை. யாராவது ஒரு ரிப்ளை குடுத்தா டெய்லி எதாவது உளறி வைக்கலாம். . என்ன கொடுமைடாஇது.. நண்டு சிண்டு எல்லாம் ப்லோக் நடத்தறது.. ம்ம்..