Posts

Showing posts from December, 2011

ராஜமொக்கை - விமர்சனம்

Image
ஒரு டைரக்டருக்கு இவ்வளவு கொலவெறி இருக்குமான்னு கொலை நடுங்கி போய், இந்த விமர்சனத்த எழுதுறேன். பல்ல கடிச்சிக்கிட்டு இந்த படத்த பல தவணையில பாத்துட்டு இந்த பாவத்த செய்றேன். ஒரு ஒலக விகர்சகனா (சரி..சரி..உள்ளூர் தான்..!) இந்த படத்த பாக்க ஆரம்பிக்கும் போதே..உள்ளுக்குள்ள மணி அடிக்கக் ஆரம்பிச்சுடுது. இது கோடம்பாக்கம் பிரிஜ் பக்கத்துல கல்வெட்டில செதுக்கி பக்கத்துலேயே உட்காந்து பாதுகாக்க வேண்டிய படம்னு. இதுக்கு துணை போன கொலை கார பாவிங்களோட லிஸ்ட் இதுதான், விக்ரம்(சொம்புவே பரவாயில்லை..ஹிம்), டைரக்டர் சுசீந்திரன்(என்னாது..இவரு ரெண்டு ஹிட்டு படம் குத்தாரா..சொல்லவேயில்ல...!), மியுசிக் – யுவன் (ஒன்ன பெத்ததுக்கு ஒரு தென்னை மரத்த பெத்துருந்தா கள்ளாவது குடிக்கலாம்..ஹிம்..). படம் புதுமையிலும் புதுமையா ரவுடிகள் அராஜகத்துல ஆரம்பிக்குது. ஒரு வில்லி ஒரு நாப்பது ஜினியர் ஆர்டிஸ்ட் புடை சூழ நடந்து வராங்க (சொர்ணாக்கா சித்தி போண்ணா இருக்குமோ?). அவங்க வரும் பொது பாம்பு மியுசிக் போகும் பொது, சீட்டுக்கு அடியில பாம்பு போற எபெக்ட் உருவாக்குறது, திரை உலகில் ஒரு தனி பாணியே உருவாக்க போகுதுனு சொல்லலாம். ஹீரோ கா

ஒஸ்தி - விமர்சனம்

Image
இந்த மாத்ரி ஒரு படத்துக்கு நம்ம விமர்சனம் எழுதலைன்னா..அது வரலாற்று பிழையாடும்ல..அதுனால மனச கல்லாக்கிகிட்டு..இந்த காரியத்த செய்றென்.. எல்லா ப்லாக்லயும்..எழுதி கிழிச்ச விமர்சனத்த நானும் சொல்றது ..செத்த பாம்பை அடிக்கற கதையா இருந்தாலும், அதுல மட்டும் தான் நாம எக்ஸ்பர்ட் உலகம் நம்பறதால தொடர்ந்து அடிப்பொம்.. ஒஸ்தி..(இந்த டைட்டில சொன்னவன் வாய்ல கெரசின ஊத்தி கொளுத்த..!) படம் ஆரம்பிச்ச , அஞ்சு நிமிஷத்துலயெ தெரிஞ்சு போய்டுது, செலவு பன்னிட்டுவந்து செருப்படி வாங்க வந்துருக்கொம்னு.. எஸ்டிஆர் (பயபுள்ள..அப்டிதான் கூப்டுக்க்குது இப்பல்லாம்..) பறந்து சுட்டுகிட்டெ வராரு..நம்ம போலிஸ் எல்லாம் திட்டம் போட்டு பன்ற என்கவுண்டர்லயெ..ரோட்ல பால் வித்துகிட்டு வர அப்பாவிய சுட்டுடுராங்க..ஆனா நம்ம ஒஸ்தி வேலன்….ஏர்லெயெ..பறந்து குறி தவறாம சுட்டுர்ர்ராரு..சரி..அதான் கரெக்டா சுடுறாரெ…எஸ் ஆவொம்னு இல்லாம…ஒரு ஜீப்ல அவரையெ..சுத்தி சுத்தி வருதுங்க..நம்ம அல்ல கைகள் எல்லாம்..கால கொடுமைடா..! சரி…கதை என்னா..ஹிந்தில டாபாங் வந்த அதெ கர்மாந்திர கதை தான் இதுலயும்.. ஒரெ அம்மா, ரெண்டு அப்பா, முதல் அப்பா செத்து போய்ட்ராரு..அவரொ