Posts

Showing posts from October, 2009

ஒரு அப்பாவியின் அழுகுரல்..!

வழக்கமா , எங்க கைலெ பத்து தேதி அப்புறம் பத்து பைசா இருக்காது. அதுனாலே நைட்லே பசங்க எல்லோரையும் கூப்டு பாட்டு , டான்ஸ் அப்படின்னு போட்டு வசூல் பண்ணுவோம். டினோசர் ரெண்டு மூணு பேரை செட் பண்ணி , ஒரு ரூபா , ரெண்டு ரூபா போட சொல்லுவான். அப்புறம் தான் எல்லோரும் பைசா போடுவானுக, கலெக்ஷன் எல்லாம் டினோசர் தான் பாத்துப்பான். சில சமயம் காபரே டான்ஸ் கூட போவும். அப்போ கலெக்ஷன் தூக்கும். நாங்க இந்த மாத்ரி கூத்து கட்றது வெளிய லீக் ஆக ஆரம்பிச்சது. எங்க பேர் டேமேஜ் ஆரம்பிச்சது. எங்க போனாலும் ஒரு அஞ்சி பெற என் பெற சொல்லி அவன் க்ருப் னு சொல்ல ஆரம்பிச்சானுங்க. பத்தாததுக்கு, நைட் பத்து மணிக்கு கரண்ட் போகும் போது என் பேரை சொல்லி கத்த ஆரம்பிச்சானுங்க, திங்க் பண்ணி பாருங்க, இருட்லே நாலு மூலை இலே இருந்தும் என் பேர் சொல்லி கத்தினா , வார்டன் வர சொல்லி முத்தமா குடுப்பாரு? மேல கம்ப்ளைன்ட் போய்டுச்சு. என் ரூமுக்கு ஒரு நாள் ரெய்டும் வந்தது. அந்த கொடுமையே அப்பரம் பாப்போம். !

அது என்னோமோ, அம்மாவாசை இருட்டுலே போனாகூட என்னை மட்டும் கரெக்டா கண்டு பிடிசிடுரனுக..!

டினோசர் போட்ட மாஸ்டர் ப்ளானுக்கு முன்னாலே, நாங்க எப்டி ஹோஸ்டேல் லே பிழைப்பு நடத்னோனு பாத்துடுவோம். சேந்த ஒரு வாரத்திலே நாங்க செவரு ஏறி குதிச்சு சினிமாவுக்கு போனதாலே , எங்களை சீனியர் எல்லாம் கட்டம் கட்டினானுங்க. வித விதமா ராகிங் பண்ணி என்னை ரூமிலேயே அடைச்சு வசிருந்தனுங்க. காப்பத்த ஒரு பய வரணுமே ? ஹுஹீம் . ..! கட்டி வச்சு அடிக்காத குறை தான். என்கூட சினிமா வுக்கு வந்தது யாருன்னு தான் அந்த விசாரணை. அது என்னோமோ, அம்மாவாசை இருட்டுலே போனாகூட என்னை மட்டும் கரெக்டா கண்டு பிடிசிடுரனுக. குருதி புனல் கமல் மாத்ரி என்னை ரூம்லே விட்டுட்டு போய்டனனுங்க. அப்பரம் தான் எல்லா சதியும் என் பேர்லே நடகிறதை புரிசுகிட்டேன். நான் பிரின்ஸ்பால் கிட்டே மாட்டின நாளும் வந்தது. அதை அடுத்து பாப்போம்..!

ஸ்காட்ச் விஸ்கி மட்டுமே (கொஞ்சம் ஓவரோ?) மட்டுமே குடிக்கிற எங்களை லோக்கல் சரக்கு குடிக்க வச்ச லோக்கல் பாயை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்.!

பாதிக்க பட்ட முறையில் லோக்கல் பாய் சொல்வது எல்லாம் பரிதாமா தான் இருக்கு. ஆனா சம்பவம் நடந்த அன்னைக்கு தர்மபுரம் ஆதினம் ஆர்ச் அருகில் ரோட்டிலேயே நாங்க ஃஃபிளாட். சைக்கிள் ஒரு பக்கம் இவர்கள் ஒரு பக்கம் கூஜா ஒரு பக்கம். அதெல்லாம் சரிதான். ஆனா சரக்கு பத்தமா அந்த கூஜாவா டினோசர் தான் உடைச்சான். வாங்கறவன் ரெண்டு கூஜாவா வாங்கி இருந்தா இந்த பிரச்சனை வருமா? ஸ்காட்ச் விஸ்கி மட்டுமே (கொஞ்சம் ஓவரோ?) மட்டுமே குடிக்கிற எங்களை லோக்கல் சரக்கு குடிக்க வச்ச லோக்கல் பாயை நாங்க கடுமையா கண்டிக்கிறோம். சரக்கு ஏடாகூட ஆகி பார்வை போயிருந்தா என்ன ஆவரது? டிநோசர்க்கு ஏற்கனேவே பாதி பார்வை தான். சரி. இப்போ ஸ்பான்சர் மேட்டருக்கு வருவோம். நான் முடிவு பண்ண ஸ்பான்சர் ஏற்கனவே பாதி நாள்தான் கிளாசுக்கு வருவான். அவன் ஊரு நெய்வேலி. அவன் நல்ல செஸ் விளையாடுவான். நான் அவன்கிட்டே டெய்லி போய் விளையாடி தோத்துட்டு வருவேன். (எப்போவாவது ஜெயிக்கிற மாத்ரி இருந்தா கூட பிளான் பண்ணி தோதுடுவேன்). அவன் ஒரு நாள் மாப்ளை இப்டி பத்து நாளா டெய்லி வந்து தோத்துட்டு போறியே.. உனக்கு வெக்கவே இல்லையானு ஒரு கேள்வி கேட்டான். நானும் மாம்ஸ் , நான் எ

லோக்கல் பாய் …….( ஒரு கூஜாவால் அசிங்கப்பட்டது)

மெண்டலுக்கும் டைனோசருக்கும் யாரும் மாட்டவில்லை என்றால் அவர்களின் பார்வை என் மீது தான். ஏனென்றால் நான் தான் லோக்கல் பாயாச்சே. ஒரு ஞாயிறு மாலை, இருவரும் சைக்கிளில் படையெடுத்து என்னை தேடி வந்தார்கள். முதலில் ½ கேட்டார்கள் இல்லை என்றதும் ¼ பிறகு நாட்டுச்சரக்கு வரை இறங்கி வந்தார்கள். என்னுடையே நிலையோ அப்பொழுது அவர்களிடம் சிகரெட் கேட்டு நின்றேன். அப்பொழுதுதான் மெண்டல் டினோசர் காதில் ஏதோ ஒதினான். அது வேறொன்றுமில்லை. என்னுடைய நண்பன் ஒருவன் நாட்டுச்சரக்கு மொத்தவியாபாரி அவனிடம் வாங்கிக்கொடு என்றார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் தான் வென்றார்கள். நண்பனிடம் இவர்களின் நிலையை விளக்கினேன். முதலில் மறுத்தான் பிறகு எங்களின் அரிப்பு தாங்கமால் , கலவை கலக்காத சரக்கை ஒரு கூஜாவில் கொடுத்து அதில் 10 மடங்கு தண்ணீர் கலந்துகொள்ளச்சொன்னான். அதை கலந்து குடித்தால் 10 நாள் மூன்று பேர் மூன்று வேளை வைத்து குடிக்கலாம். நண்பனோ மிகவும் கவணமாக எடுத்துசெல்லும்படியும் கூஜாவை நாளை கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லி அனுப்பினான். இவர்களும் மகிழ்ச்சியுடன் சைக்கிளில் கிளம்பிச்சென்றார்கள். அதான் குரங்கு அப்பம் தின்ற

இதுவும் ஒரு பொழப்பானு லோக்கல் பாய் கேப்பான். கண்டுக்கமே மேல படிங்க..!

வீட்டு கலயாணத்துக்கு கூப்ட்ரவனுக்கு எல்லாம் இந்த கல்யாணம் ஒரு பாடம் . வாங்கற சரக்க ரூம்லே வாங்கி குடுத்துட்ட , நாங்க ஏன் இப்டி நல்ல காரியத்து எல்லாம் போயி இப்டி பிளாட் ஆவணும். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா லெவெலுக்கு வர வேண்டியவனை இப்டி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆட வச்சது யார் குற்றம்.? சரி.. இப்போ ஸ்பான்சர் மேட்டருக்கு வருவோம். டினோசர் அடியாள் மாத்ரி இருந்ததாலே அவனுக்கு ஈசியா ஸ்பான்சர் கிடைச்சாச்சு. ஒன்னு இல்லை மூணு பேர். எனக்கு ஒர்த்தனும் கிடைக்கலை. டீ, சிகரட், சாப்பாடுன்னு செட்டில் ஆயிட்டான். அப்போ அப்போ என்னை பாத்து நக்கலா சிரிப்பு வேற. அப்போ தான் என் திறமை மேல எனக்கு சந்தேகம் வந்தது. ஆனா நம்பிக்கை மட்டும் இருந்தது. எனக்கு சரியான ஆள் ஒருத்தன் மாட்டினான். அதை அப்பரம் பாப்போம். ..! இதுவும் ஒரு பொழப்பானு லோக்கல் பாய் கேப்பான். கண்டுக்கமே மேல படிங்க..!

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்…

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்… இந்நண்பனை நாங்கள் எல்லோரும் ஜமுக்கு என்று தான் கூப்பிடுவோம். சும்மா பழம் மாதிரி இருப்பான். ( கொஞ்சம் அதிகமாக அளந்து விடுவான். எங்களின் வறுமை மற்றும் விதி பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை) அவன் எங்கள் எல்லோரையும் மதித்து அவன் சகோதரியின் கல்யாணத்திற்கு அழைத்திருந்தான். எங்கள் அமைச்சரவையிலும் எல்லோரும் போவதாக முடிவெடுத்து அவனிடமே பஸ்ஸிற்கு காசெல்லாம் வாங்கி ரெடியாகிவிட்டோம். சுமார் 10 அமைச்சர்கள் என்று நினைக்கிறேன். பரிசு பொருள் வாங்குவதற்காக வசூல் ஆனத்தொகை வெறும் 75 ரூபாய். அதிலும் டினோசர் கமிஷன் அடித்தான்.( என்ன ஒரு பிளய்ன் சிகரெட் இதற்காக எனக்கும் அவனுக்கும் சண்டை வேறு). எத்தனையோ கல்யாணத்தில் கலந்திருந்தாலும் இந்த கல்யாணத்தை எங்களால் மறக்கமுடியாது. அன்று பா.ம.க வினர் பந்த் அறிவித்திருந்தார்கள். சும்மாவே மரத்தை வெட்டுவார்கள் இதில் அவன் இருக்கும் ஊர் ஜெயங்கொண்டம் அவர்களின் கோட்டை வேறு. நாங்கள் பயப்படுவோமா, ஆம்பளை சிங்கமுல்ல… டிராக்டர் பிடித்து, லாரி மாறி, கொஞ்சம் நடந்து அந்த ஊர் போய் உயிருடன் சேர்ந்ததே பெரும்பாடாகி விட்டது. அவனது அப்ப

ரெண்டு ஓநாய் சேந்து ஒரு ஆடு அமுக்க்றதா கஷ்டம்..!

லோக்கல் பாயின் மன குமுறல் எனக்கு புரியுது . இவன் மாச மாசம் வீட்டுக்கு கூப்டு சாப்பாடு போட்டபயே எனக்கு டவுட். என்னை ஒரு டெமோ பீஸ் ஆக்கி நிவாரணம் வாங்கி இருக்கான். சரி , வாங்கினவன் என் பங்கை குடுத்தானா? அதுவும் இல்லை. இவன்கிட்டே எவளவு பணம் இருக்குன்னு நானும் டிநோசரும் பிளான் பண்ணி கண்டு பிடிப்போம். முதல்லே ,இன்னக்கு யாருன்னு முடிவு பண்ணுவோம். அப்பரம், டினோசர் போய் பின்னாடி நின்னு பாகெட் பாத்து ஊதுவான். பணம் எவளவு வச்சிருக்கான்னு, என்கிட்டே சொல்லுவான். ஆபேரஷன் கு பேர் கூட வைப்போம். முதல்லே நான் போய் சைகாலோஜிகால பேசி அவன் கிளாசுக்கு போற மூட மாத்துவேன். டினோசர் வழியிலே புளிய மரத்துலே வெயிட் பண்ணுவன். ஏன்னா , நான் ஒரு வேலை தோத்துட்டா , அவனை வழியிலேயே அமுக்குரதுக்கு. ரெண்டு ஓநாய் சேந்து ஒரு ஆடு அமுக்க்றதா கஷ்டம். அன்னைக்கு டீல் ஓவர். அப்போதான், எனக்கும் டிநோசருக்கும் ஒரு கவலை. இப்டி டெய்லி ஆள் பிடிக்கிறது கஷ்டமா இருக்கே. அதோட எல்லோரும் நம்மள பாத்தாலே தெறிச்சு ஓட்ரனுங்க. எத்தனை நாள் தான் நாம அன்றடங்காச்சி கால இருக்ரதுனு. ஒரு மாத்ரி யோசிச்சி ஆளுக்கு ஒரு ஸ்பொன்சர் பிடிச்சி நிரந்தரம

இதை படிக்கும் நண்பர்களுக்கு…..ஒரு எச்சரிக்கை…

தயவுசெய்து எல்லோரும் எதாவது எழுத முயற்சியுங்கள்….இன்னுமா ஏதும் எழுத கத்துக்காம அப்படியே புண்ணாக்கா இருக்கீங்க ( எப்படிடா மெண்டல் , இது போதுமா) இதற்கு டைனோசர் விதிவிலக்கு ( அவன் எழுத படிக்க தெரியாதவன் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ) நாகரீகம் கருதி இத்துடன் விடுகிறேன். Atleast Photo வாவது Followerல் போடுங்கப்பா…….…!) லோக்கல் பாய்

கொசு..!.….(கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதவன்)

கொசு..! எத்தனை காயில் கொளுத்தினாலும் இவனை மட்டும் கொல்லவே முடியலை..! கள்ளனை நம்பினாலும் நம்பலாம் ஆனால் ……………………நம்பக்கூடாது என்பார்கள் (சும்மா விளையாட்டுக்கு மாப்ள, கோவிச்சுக்காத) முகத்தை பாவமாக வைத்திருப்பான். எங்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பான். ஏனென்றால் அவன் அப்பொழுது வயதுக்கு வரவில்லை. (ஆனா பிஞ்சிலேயே பழுத்தவன்) பிறகு எங்களின் வீக்னஸை எல்லாம் தெரிந்துக்கொண்டு எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டவன். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அவ்வப்பொழுது சில நல்ல ஐடியாவும் குடுப்பான் ( எப்படி உருப்படாமல் போவது என்பதற்கு). என்னுடைய அழிவில் இவனுக்கும் பங்குண்டு. (நீ எங்க ஊரு மாப்பிள்ளை என்று சொல்லியே என்னைக் கவிழ்த்தவன்..) ம்.. மண்டையனையும், இவனையும் மறக்க முயற்சிப்பது நல்லது.. ஏனென்றால் இனியாவது நான் உருப்படுனுமுல்ல.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே…………..என்ன சொல்றீங்க நண்பா, லோக்கல் பாய்

மெண்டல்…. பெயர் விளக்கம்

மெண்டல்… . இந்தப்பெயருக்கு இவ்வளவு பொருத்தமானவன் இவனைத்தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. இப்பெயரை இப்பொழுது வரை கட்டிக் காப்பாற்றிவருபவன். இவனைப்பற்றி இங்கு சொல்லவில்லை என்றால் எனக்கு இந்த ஜென்மப்புண்ணியம் கிடைக்காமல் போய்விடும்… வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வாழ இவனிடம் தான் கற்றுக்கொண்டேன். யாரிடமும் எளிதில் பழகிவிடுவான். இயற்கையிலேயே வெள்ளை மனம் கொண்டவன். ( என் வீட்டில் இவனைக்காட்டி நிறைய பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்துள்ளேன். இவன் ஆதரவற்றவன். இவன் படிப்புக்கு நாங்கள் எல்லோரும் தான் உதவுகிறோம் என்று... அதற்காக இப்பொழுது அவனிடம் மன்னிப்புக்கோருகிறேன். ஏனென்றால் நான் ஒரு ஜென்டில்மேன்). அப்பொழுது ஜெண்டில்மேன், காதலன் போன்ற படங்கள் வந்த சமயம். ஒசியிலேயே படத்தை பலமுறைப்பார்த்து 2,3 ஸ்டெப் டான்ஸ் கற்றுக்கொண்டு, டேய் இதைப்பாரேன்..இதைப்பாரேன் என்று எல்லோரிடமும் ஆடி காண்பித்து உயிரை வாங்குவான். டைனோசர் இவனை உசுப்பேற்றிவிட்டு காலேஜ் புரோகிராமிலும் மேடையில் ஆடி எங்கள் வகுப்பில் உள்ள எல்லோரின் மானத்தையும் வாங்கினான். (அதே பாடலுக்கு ஒரு ஜூனியர் மேடையில் ஆடியதைப்பார்த்த பிறகு த

ஆகா ..வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. !

வாங்க.. கொஞ்ச காலம் பின்னாடி போவோம். (எத்தனை வர்ஷம்னு சொன்னாக்க வயசு தெரிஞ்சுடும்.. அப்பரம் இளம் ரசிகைகள் ஆதரவு கிடைக்காம போய்டும்..ஹீ ..ஹீ ) இந்த பிளஸ் டூ அப்டின்ற சுனாமிலே மாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு , ஒரு ஊரே அடிச்சு விரட்ட்ரே நிலைமைலே தான் பாலிடெக்னிக் லே சேந்தேன். உள்ளே வரும்போதே எப்டியாவது படிச்சி பெரிய ஆளு ஆகி காட்டணும்னு வந்தேன். மேன் ப்ரொபோஸ் ... பட் காட் டிஸ்போஸ் .. அப்டிங்கற பழமொழி அப்போ என்னக்கு தெரியாது. விதி டினோசரை வேற ஒரு என்ட்ரன்ஸ் வழியா உள்ள அனுப்பிருக்கு. அவனும், பிளஸ் டூ லே சிக்கி சின்னபின்னமாயி தான் வந்து இருக்கான் ..! இந்த 12B படத்திலே வரமாத்ரி , லைப் லே ரெண்டு ட்ராக் இருந்தாக்க , நான் அந்த மொமென்ட் கேட்ச் பண்ணி , வேற பஸ் பிடிச்சி கண் காணாம ஓடி போயிருப்பேன் . ரூம்லே பாத்தா இவன் சீனியர் மாத்ரி உகந்துக்கிட்டு , என்னை ஏன் லேட்டுங்க்றான் . எல்லா விசாரணைக்கு அப்பரம் , நானும் உன்னை மாத்ரி தான் , இப்போதா வந்த்தேன்ரான் . ஆகா .. வந்துட்டான்யா .. வந்துட்டான்யா .. ! ன்னு உள்ள குமுரிக்கிட்டு இருந்தேன் . ஓகே . கொஞ்சம் கேப் விட்

இந்த ப்ளாக் ஸ்பாட் வரலாற்றிலேயே ஒரு ப்ளாக் ஓனர் அவமான படுத்த படறது இதுதான் முதல் முறை..!

இந்த ப்ளாக் படிச்சுகிட்டு இருக்கிற நூற்று கணக்கான (சரி.. சரி.. அஞ்சு பத்து பேர்தான்..! ) நண்பர்களுக்கு, ஒரு செய்தி. கீழ இருக்கிற போஸ்ட், என்னாலையும் , டினோசர் ஆளையயும் பாதிக்க் பட்டவன் நாள போஸ்ட் செய்ய பட்டது. இந்த ப்ளாக் ஸ்பாட் வரலாற்றிலேயே ஒரு ப்ளாக் ஓனர் அவமான படுத்த படறது இதுதான் முதல் முறை. ஆனாலும், அந்த போஸ்ட்லே இருக்கிற நியாயத்துக்கு நான் கட்டு படறேன். (வேற வழி..!) . இது விஷியமா, டிநோசருக்கு எதாவது கருத்து இருந்தா அதை போஸ்ட் பண்ணலாம். நாங்க இப்டி ஒரு வழிபறி பன்றவங்களா மாறினதுக்கு என்ன சமூக காரணம், அது ஒரு பெரிய கதை. அதை சொல்றதுக்கு, கொஞ்சம் வரலாறை திரும்பி பாக்கணும். பாத்துடுவோம்.. !

டைனோசர் ரொம்ப நல்லவன்….(16வயதினிலே பரட்டை மாதிரி)

டைனோசர் ரொம்ப நல்லவன்………..(16வயதினிலே பரட்டை மாதிரி) எங்கள் குரூப்பில் எல்லோருமே காதல் ரோமியோக்கள் தான் (டைனோசரை தவிர..ஏனென்றால், எந்த பெண்ணும் அவனை பார்த்தால் பயப்படும், கண்டபடி கிண்டல் பண்ணுவான் (எதுவும் மாட்டாத பொறாமையில்)). அவன் செய்வதெல்லாம் சரி என்பது போல் மெண்டல் பயலும் அவனின் ஸ்பான்சர்சிப்பிற்காக ஜால்ரா அடித்துக்கொண்டு அலைவான். மெண்டல் பய சிரிப்பழகி சினேகாவிடம் கடைசியில் கவிழ்ந்தது தனிக்கதை. அதை பிறகு பார்ப்போம். நாங்கள் கல்லூரி வளாகத்தில் நடக்கும்பொழுது எதிரில் வரும் எங்களின் தோழிகளை டைனோசரின் கிண்டலிலிருந்து எப்படி காப்பாற்றுவோம் தெரியுமா? ஒரு டீ மற்றும் சிகரெட் டைனோசருக்கு லஞ்சம் கொடுத்து தான். ஹூம், இப்படி அப்பாவிகளை மிரட்டி வாழ்ந்ததெல்லாம் ஒரு வாழ்க்கையா? நினைவுகள் மற்றும் வயிற்றெரிச்சல்கள் தொடரும்……..

மானம் உள்ளவங்களா இருந்தா எப்பவோ தூக்கு போட்டு இருப்பானுங்க. நாங்களா இருந்ததால பொழச்சோம்...!

அடுத்து எக்ஸாம் டைம். நைட் எல்லாம் கண்ணு முழிச்சு படிக்கிற பசங்க எங்களை பக்கத்லேயே சேத்துக்க மாட்டனுங்க. இவனுங்க மட்டும் படிக்கும் பொது எங்களுக்கு மட்டும் எப்டி தூக்கம் வரும். சிகரெட் முடியிற வரைக்கும் படிக்கிற மாத்ரி சீன் போட்டு காலைலே எக்ஸாம் கு போவோம். நான் மூணு யூனிட் படிசிட்டேனு டினோசரும், டினோசர் நாலு யூனிட் படிச்சிட்டானு நானும் கிளப்பி விடுவோம். பசங்க காலைலே எங்ககிடே வந்து முக்கியமான கொஸ்டின் ஒன்னு சொல்லு மாப்ளைன்னு கெஞ்சு வராங்க. நாங்களும் கிளி சீட்டு எடுக்கிற மாத்ரி ஏதோ ஒரு கொஸ்டின் எடுத்து கொடுப்போம். இவனுங்களும் அதை நம்பி படிப்பானுங்க.. அப்பரம் எக்ஸாம் ஹால் படிச்சது எல்லாம் மறந்துட்ட மாத்ரி டென்ஷன் லே இருப்போம். நம்ம அவஸ்தை பாத்துட்டு வாத்தியார் பெல் அடிச்சா கையோடு எங்களை பேப்பர் வாங்கிட்டு அனுப்புவார். இப்போ ப்ராப்ளெம் என்னன்னா வெளிய்லே வர பசங்க கொஸ்டின் பேப்பர் கஷ்டமா இல்லை ஈசியானு கேட்டா என்ன சொல்றது. நான் ஈசினும், டினோசர் கஷ்டம்னும் சொல்லி சமாளிப்போம். ஏன்னா பேப்பர் குடுக்கும் போது, இந்த பொண்ணுங்க எல்லாம் லைட்ட சிரிப்பாங்க மார்க்க கேட்டு. மானம் உள்ளவங்களா இருந்தா எப்ப

தியேட்டர் க்கு வெளியிலே சூர்யா தேவா ன்னு டயலாக் பேசினதை கேட்டு ஏமாந்துட்டேன்

இப்போ சொல்ல போறதும் ஒரு மானங்கெட்ட சம்பவம் தான். ஒரு முறை நானும் டினோசரும் சினிமாவுக்கு போனோம். இப்போவும் டினோசர் தான் ஸ்பொன்சர். படம் ஆரம்பிக்க அரைமணி நேரம் முன்னாலேயே போய் கவுண்டேர்லே நின்னு பேசிட்டு இருந்தோம். (வெளிலே இருந்து மட்டும் என்ன கிழிக்க போறோம்). நல்லாத்தான் பேசிட்டு இருந்தோம். கரெக்டா பெல் அடிச்சு டிக்கெட் வாங்கும் போது டினோசர் மட்டும் ஒரு டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போய்ட்டான். நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். எனக்கு இந்த மாத்ரி செருப்படி பழகினதலே டிக்கெட் குடுக்கிறவன் கிட்டே , நண்பன் சும்மா இப்டித்தான் எதாவது ஜாலிக்காக பண்ணுவான் பாருங்க இப்போ வந்துடுவான் சொல்லிட்டுஇருந்தேன். அவனும் அஞ்சி நிமிஷத்து அப்பரம் வந்தான். நான் டிக்கெட் குடுகிரவன் கிட்டே , நான் சொன்னேன் இல்லன்னு சொல்லிட்டு இருந்தேன். வந்தவன் அவன் கிட்டே இவனை யாருனே எனக்கு தெரியாது, உள்ளே விடாதிங்கனு சொல்லிட்டான். A அப்புறம் கடுப்பு ஆயி தியேட்டர் லேருந்து வெளியே வந்து ... அதான் இல்லை, சும்மா கெளரவம் படத்திலே வர சிவாஜி மாத்ரி மெய்ண்டைன் பண்ணி வெயிட் பண்ணேன். அப்பரம் பாத்து நிமிஷத்து அப்பரம் வந்து டிக்கெட் எடுத்தான்.

ஜெனரல் நாலேட்ஜ் உள்ள எல்லாருக்கு வர சோதனை தான்..!

ஒரு முறை எக்ஸாம் டைம். ஒரு குறிபிட்ட சப்ஜெக்ட் பத்தி நான் அதிகம் தெரிஞ்ச மாத்ரி பேசிட்டு இருந்ததினலே, பசங்க எல்லாம் என்னை சொல்லி குடுக்க சொன்னாங்க. நானும் என்னடா அவசர பட்டுடோமே, புக் வேற இங்கிலீஷ் லே இருக்கேன்னு , கவலை பட்டு இருந்தேன். அப்புறம் தான் இந்த கும்பலுக்கும் இங்கிலீஷ் தெரியாதுன்னு மைண்ட் குள்ளே ஒரு பப்ல்ப் எரிஞ்சது. சரி ன்னு என் சொந்த சரக்கு எல்லாம் மிக்ஸ் பண்ணி சமாளிச்சு சொல்லிகுடுத்ரிந்தேன். அனா இந்தே டினோசர் மட்டும் என் பக்கதிலே வரலை. அவன்தான் என் மூளை வளர்ச்சியே நோட் பண்ணிகிட்டே இருகானே. என் சரக்கு அவனுக்கு தெரியாதா? எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட் வந்துடுச்சி. எல்லாரும் பாஸ் , நான் மட்டும் அவுட். . வெளிய்லே தலை கட்ட முடியலை. சரி ஜெனரல் நாலேட்ஜ் உள்ள எல்லாருக்கு வர சோதனை தாணு மனசை தேத்திக்கிட்டேன்.

ஒரு அரை மணி நேரம் தியானம் முடியுதா இந்த உலகத்திலே?

அடுத்து, டினோசர் தான் .. வேற யாரு. க்ளாஸ்லே நடத்தறது எங்க எனக்கு புரிஞ்சிடுமோ னு .. பக்கதிலே உக்காந்து எனக்கு எதுவும் புரியமா பாத்துக்குவான். எங்களுக்கு அப்போவே தியானம் பண்ண தெரியும். அட நடத்தறது புரியாம நைசா தூங்கறத தான் அப்டி சொல்றேன். அப்பதான் ஒரு நாள் நான் தியான நிலைய லே இருக்கும் போது வாத்தியார் யாரையோ பொதுவா ஒரு கேள்வி கேட்டு இருக்கார். இந்த டினோசர் யாருக்கும எந்த தொல்லையும் பண்ணமே தூங்கிகிட்டு இருந்த என்னை எழுப்பி விட்டுட்டன். மாப்பிளை உன்னை கூப்ட்ருரர்னு. நானும் என் தியானம் கலைஞ்சி சார் கூப்டிங்களனு கேட்டு தொலைஞ்சிட்டேன். அவரு நிலை குலஞ்சி போய் சமாளிச்சு கிட்டு ஒரு கேள்வி கேட்டார். எனக்கு வழக்கம் போலே பதில் தெரியலை. (முழிச்சிகிட்டு இருந்தா மட்டும் தெரியவா போவுது). என் தியானம் கலைச்ச டினோசருக்கும பதில் தெரியாதம். பாருங்க என்னா க்ளோசா வாட்ச் பண்ணி இருக்கான் என்னை. ஒரு அரை மணி நேரம் தியானம் முடியுதா இந்த உலகத்திலே?

நல்லா கிளபுரங்க பா பீதியே..!

அடுத்து..மறுபடியும். டினோசர் தான், அவனுக்கு மெயின் வேலையே என் திறமைய வெளிலே எடுத்து வந்து என்னை கௌரவ படுத்தறதுதான்.. என்னா பாக்ரிங்க.. ஏத்திவிட்டு வேடிக்கை பாக்ரதைதான் தான் இப்படி சொல்றேன். ஒரு முறை பஸ் லே கடைசி சீட் லே உட்காந்த்து போனோம். அப்டி போகும் போடு என் பகத்திலே ஒருத்தர் நல்ல தூங்கி கிட்டு இருந்தார்.. டினோசர் நைசா என் கிட்டே பக்கதிலே தூங்கிகிட்டு இருக்கிறவர் பாக்கெட் லேருந்து பேனா எடு மாப்ளைன்னு சொன்னான். நான் மாப்ளை அது திருட்டு டா னு சொன்னேன். அதுக்கு அவன் சொன்னான், மச்சி பாக்கெட் லேருந்து பணம் திருடினதான் அது திருட்டு. பேனா எடுத்தா அது டைம் பாஸ் மச்சினு ஒரு புது தியரி சொன்னான். நானும் குழம்பி போயிட்டேன். ஆனா அந்த தியரி எனக்கு பிடிச்சிருந்தது. அப்பரம் நானும் அந்த ஆள் மேல தூங்கி விழுகிற மாத்ரி நடிச்சி..பல்லால கடிச்சி பேனாவ எடுதுட்டேன். அப்பரம் அந்த டினோசர் தியரி எ மாத்தி பப்ளிக்லே எப்டி திருடினாலும் த்ரிட்டு த்ரிட்டு தான் தியரி யை மாத்திட்டன். அது மட்டும் இல்லாம தூங்கற வரை எழுப்பி நான் பண்ண வேலை யை சொல்ல போறேன்னு சொல்லிட்டன். அப்பரம் என்னா,...புட் போட் லேருந்த் கு

இவனல்லவோ கொள்கை குன்று .!

இன்னொரு நண்பன், அவனக்கு டீச்சர் புருஷன்னு பேரு. இவனக்கு இந்த பேரு இருக்குன்னு.. அந்த டீச்சேரோட புர்ஷனுக்கு தெரியாது.. புரிசுருக்கும் நு நினைக்கிறேன். அவன் எங்களுக்கு தெரிஞ்சு பஸ்லே டிக்கெட் எடுத்ததே கிடையாது. எந்த டௌபுட் வராமே இருக்க . டிரைவர் , கண்டக்டர் கிட்டேயே போய் பேசிட்டு இருப்பான். அப்டியே டிக்கெட் எடுதிங்கலனு கேட்டா , எதோ ஒரு பஸ் பெற சொல்லி தான் அங்கே வேலை பாகிறேனு சொல்லிடுவான். ஒருமுறை, எட்டு பொண்ணுங்க (எங்க கிளாஸ் மேட் தான்) இவன்கிட்டே பைசா குடுத்து டிக்கெட் வாங்க சொல்லிருகங்க. இவன்தான் வாழ்கையிலே டிக்கெட் எ எடுக்க மாட்டேனு தாதாகிட்டே சத்யம் பன்னிஇருகானே. வழக்கம் போலே பைசா வாங்கி பாக்கெட் லே போட்டுட்டு வந்து இருக்கான். செக்கெர் வந்து எல்லாரும் மாட்டி கிட்டாங்க. இவன் எப்டியோ எஸ்கேப் ஆயிட்டான். மத்த பொண்ணுங்க எல்லாம் பைன் கட்டிட்டு கிளாஸ் கு வந்தாங்க.. ஏற்கனவே எங்களை ரொம்ப மதிபாங்க . இப்போ கேக்கணுமா..? இவனல்லவோ கொள்கை குன்று .! இவன் எங்களுக்கு எப்போவுமே.. ஒரு உதாரண (கள்ள) புர்ஷன் தான்

இன்றைய நீதி. காதல் தூது போய்ட்டு வந்து குடிங்கப்பா..

அடுத்து ஒரு லவ் ஸ்டோரி, நண்பன் ஒருவன் ஒரு பொன்னு லவ் பண்ணான். கிளாஸ் மேட் தன.. ரொம்ப சீரியஸ். எவளவோ பேச ட்ரை பண்ணி இருக்கான். முடியலை.. இன்னொரு நண்பனை கூப்டு நீதான் மாப்பிளை பேசி அந்த பொன்னு சம்மதிக்க வைக்கணும்னு சொல்லி இருக்கான். எவனோ ஒரு பேமானி கள்ளு குடிச்சுட்டு போன பொன்னு கிட்டே தைரியமா பெசல்ம்னு சொல்லி இருக்கான். இவனும் ரெண்டு லிட்டர் கள்ளு குடிச்சுட்டு. (ஏற்கனவே ஆளு சும்மா அய்யனார் கணக்கா இருப்பான், இதுலே கள்ளு வேற ..கைலே அருவா ஒன்னு இல்லாத குறை). போய் பேசி இருக்கான். .என்னா பேசன்னு அவனுக்கே தெரியலை யாம். மறு நல்லேன்ருது ..அந்த பொன்னு அவனுக இருக்கிற பசங்க இருக்கிற பக்கம் கூட தலை வச்சு படுக்கலை. இவளதுக்கும் அந்த பொன்னு ஐயர் பொண்ணு. ரெண்டு லிட்டர் ஓசி கள்ளு க்கு ஆசை பட்டு காதலுக்கே சமாதி கட்டித்தான். அப்பரம் லவ் பண்ண நண்பன் சோகாதில கள்ளு கடைலயே பழி கிடந்தது வேற கதை.

எத்தனையோ அவமானம், அதிலே இது ஒரு அவமானம்னு.. போய்டே இருபோம்லே

மறுபடியும் டினோசர் கதை தான் , வழக்கமா சினமாவுக்கு கூப்டு போறவனுக்கு கூட போற அல்ல கைங்க சர்வீஸ் பண்ணனும். நானும் அப்படித்தான் தோளே தூக்காத குறையா என் ஸ்பான்சருக்கு எல்லா வேலையும் செஞ்சேன். ஒரு குறையும் வக்கலை. நல்லாத்தான் போயிட்டு இருந்தது. பஸ் ஸ்டாப்லே புஸ்க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம் பஸ் வருதா , பஸ் வருதா அப்படின்னு பாத்து சொல்லிட்டே இருக்கனும் , அப்டியே லாரி வந்தாலும், அண்ணே லாரி வருதுனே அப்டின்னு பாத்து சொல்லணும். நானும் ஓசி சினிமாவுக்காக அந்த கொடுமைய பொறுத்து கிட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். கடைசியா பஸ் வந்தந்து. திரும்பி பார்த்தா என் ஸ்பொன்சர் தெறிச்சு ஓடிகிட்டு இருக்கான். அப்பரம் ஹச்டளுக்கு வந்து பாத்தா. நான் ஸ்போன்சர்னு நினைச்சிகிட்டு இருந்தவன்கிட்டயயும் பணம் இல்லையாம். அவன் காலையிலேர்ந்து ஒரு ஸ்பொன்சர் கு ட்ரை பண்ணி இருக்கான். . . கிடைக்காத விரக்தியலே என் கூட விளையான்றுக்கன். என்னா ஒரு கொல வெறி. சரி எத்தனையோ அவமானம், அதிலே இது ஒரு அவமானம்னு.. போய்டே இருபோம்லே..

இது மாதரி சொல்லிட்டு அடிச்சாக்கா ..நமக்கும் டைம் மிச்சம் இல்லையா..!

அப்பரம் ஒரு டப்பிங் படம்... அக்காபுருஷன் னு பேரு (பேர சகிக்கலை இல்லை..). இந்த டினோசர் நண்பன் பண்ண தொல்லையிலே படத்துக்கு போனோம். அந்த படாத படத்துக்கு.. பழைய செருப்ப எடுத்து.. நம்மாலே அடிச்சிக்கலாம். மாப்ளை..என்னடா பண்றது..இருந்த அம்பது ரூபாயும் செலவு ஆயிட்ச்சி மாப்ளை..னு கவலை பட்டுத் வந்தோம்.. அப்போதான் டினோசர் ஒரு ஐடியா குடுத்தான்.. நேர ஹாச்டளுக்கு போய், படம் ஆகா ஓகோனு இருக்கு.. இன்னைக்கே அந்த படம் கடைசின்னு ..கொலுதீ போட்டுடோம். அன்னைக்கு நைட் இருபது பேரு வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு போய் பாத்துட்டு... வந்து... அப்பரம்.. என்ன.. அதன் உங்களுக்கே தெரியுமே.. போர்வை போட்டு அடிச்சதன்லே எதனை பேர்னு தெரியலை.. லாங் ஜர்னி பஸ்லே போகும் பொது.. உடம்பு வலி வரதில்லையா.. அது மாத்ரி நினைச்சுக்க வேண்டியதான்

இதுவும் ஒரு வெ(க)ண்ணீர் கதை தான்..

அதே மாத்ரி இன்னொரு சம்பவம், நியூ இயர் பார்ட்டிக்கு காரைக்கால் போய் சரக்கு வாங்க என்னையும்..அந்த டினோசர் இருப்பானே..அவனையும் என்னையும் அணுபிணங்க. (காரைக்கால் சரக்கு கொஞ்சம் சீபா இருக்கும்) நாங்க திருந்திட்டோம்இனிமே தப்பு செய்ய மாட்டோம்னு சொல்லிட்டு கிளம்பினோம். நானும் நண்பன் கிட்டே..இந்த தடவை..நம்ம நாணயத்தை காமிக்கணும் டா மாப்பிளை னு சொல்லிட்டு. கொஞ்சமா சாப்டோம். அதோட வந்து இருக்கலாம்.. மாப்ளை இதிலே..செக் போஸ்ட் இருக்கு. நாம தைரியமா இருக்கணும்னா இன்னும் கொஞ்சம் சாப்டோவோம்னு சொன்னான் என் நண்பன். நானும் நம்பி ரெண்டு பெக் போட்டேன்..ரெண்டு நாலு ஆயி.. எட்டு ஆயி வழியிலே எதோ ஒரு பஸ் ஸ்டாப் லே இறங்கி படுத்த்டோம். காலையிலே பாத்த..ரெண்டு ஆடு படுத்த்துரிக்கு பக்கத்திலே..வாங்கின சரக்கு லே பாதி நாங்களே சாப்டுடோம்.. அப்பரம் என்ன கைபுள்ளைக்கு நேர்த்த கதைதான்.. இந்த முறை..வேன்னிரோட..பெய்ன் கில்லேரும் தேவை பட்டது..

வென்னீர் போட்டு குளிச்ச எல்லாம சரியாய் போய்டும் லே...!

அப்பரம் இன்னொருத்தன் ..நம்மள மாதரியே.. (வந்து சேருது பாருங்க..) ஒருமுறை. வாத்தியார் ஒருத்தர்..எல்லாரும் கட்டாயம் வொற்க்புக் வாங்கனும் , அதுவும் அந்த புக் சிவகாசி லே தான் கிடைக்கும். யாராவது பொறுப்பா போயிட்டு வாங்கனும் யாரு போறீங்க னு கேட்டார். நானும் என் நண்பனும் முகத்த பாவமா வச்சிட்டு நினோம். அவரும் நம்பி எங்களை வசூல் பண்ண சொல்லி போக சொன்னார். நாங்க போய் ரூம் போட்டு செலவு பண்ணிட்டு ரெண்டு நாள் அப்பரம் பொக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தோம். எல்லாருக்கும் குடுத்தாச்சு.. கடைசியா வாத்தியார் எல்லாரும் வங்கிட்டிங்கள னு கேட்டு..வங்கதவங்க நில்லுங்க னு சொன்னார். என்ன நடந்துற்க்கும் னு சொல்லுங்க...? நின்னது நானும் சிவகங்கை போய்டு வந்தவனும்தான். நீங்க எல்லாம் ஏன்டா உயிரோட இருங்கிங்கனு ஒரு பார்வை பத்தாறு பாருங்க.. அப்பரம் என்ன எல்லாம் உள் காயம்.. வென்னீர் போட்டு குளிச்ச எல்லாம சரியாய் போய்டும் லே...!

ப்ளாக் க்கான சரித்திர பெயர் காரணம்..

நியாயமா இந்த ப்ளாக் நாமே மணிடுமணி தான் இருந்து இருக்கணும். அப்புறம் என்ன.. நானே எழுதி நானே எத்தனை நாள் தான் படிக்கிறது. ஆனா ஒரு மாசத்திலே இந்த ப்ளாக் மணிடுமேனி நு மாத்தி காமிக்கிறேன். இல்லென தெலுங்கு கத்து கிட்டு அதிலே ட்ரை பண்ண வேண்டியதன்.. என்ன கால கொடுமைடா.. இது..!

ஜம்முக்கு பார்ட்டி

அடுத்து..எல்லா செட்லேயும் இருக்கிற ஜம்முக்கு பார்ட்டி. எதையுமே எக்ஸ்ட்ரவ தன் சொல்லுவான். கல்லு தோசை சப்டகூட.. கி ரோஷ்டுனு சொல்லுவான்.. அவங்க அப்பா வந்த வாடகை காரை கூட.. சொந்த கார்ன்னுசொல்லிட்டன். பணம் எப்போ கேட்டலும் குடுப்பன்.. எவளவு குடுத்தான்னு நினைவு இல்லை.. திரும்பி நான் குடுத்ததவும் நினைவு இல்லை. ஹிஹி .. இதுக்காக அவன் ஜம்ம்கு எல்லாம் பொருத்துக்கிட்டோம்.... அவன் கிட்டே எங்களுக்கு பிடிச்சது...அவன் செயின் தான். அது தெரிஞ்சு.. அவன் கழுத்து பட்டன் போடு தான் வருவான்..

அவன் ரொம்ப நல்லவன்...!

அடுத்து.. ஒரு கும்பகோணம் நண்பன் ..ரொம்ப நல்லவன்.. காந்தி ஜெயந்தி கு மட்டும் குடிக்கவே மாட்டான் . ( என்னா ஒயின் ஷாப் அன்னிக்கு லீவ் ) . ஒருமுறை ஒயின் ஷாப் லே சண்டை வந்து..ஆன பிறகு .. பாத்த அவன் சண்டை போட்டது.. அவன் அப்பகிடே .. என்ன ஒரு தெளிவான குடும்பம்.. அப்பரம் மகனும்..அப்பாவும்.. சேந்து.. வீட்டு போனங்கலம். வெத்தலை பாக்கு போடறது.. சுருட்டு பிடிக்கறதுன்னு ..அவன் சொல்லிக்குடுத்த நாகரிகம் இருக்கே. அட அட அட.. டோடல் விலேஜ் விடுதுக்குள்ளே வந்த மாத்ரி.. குடிதண்ணிர மிச்சம் பிடிக்கிறேன்..நு விஸ்கி கூட அப்படியேதான் குடிப்பன்.. அவன் ரொம்ப நல்லவன்...!

நானும் எவளவு நேரம் தன் வலிக்காத மாதரியே நடிக்கறது..!

அடுத்து.. சென்னை சேந்த ஒரு நண்பன்..(இப்போ எங்கேன்னு தெரியலை) . சரியான படிப்பாளி. (விதி அவனை என் ரூமு க்கு விட்டுடிச்சு..) நானும் அவன்கிட்டே படிக்கற பையன் மாதரியே நடிச்சேன்..(அந்தே மாத்ரி நடிக்கிற கஷ்டம் இருக்கே.. அந்த கொடுமைக்கு படிச்சிடலாம்..) அவனும் ரொம்ப ஹாப்பி எ என் கூட செந்துக்கிட்டன். அப்பரம் ஒரு செமஸ்டர் ரிசல்ட் க்கு அப்பரம் என்னை ஒரு கரப்பான் பூச்சி மாத்ரி பதான்.. அப்பரம் தான் நான் படிக்கிற பசங்க அலர்ஜி நு புரிசுக்கிட்டேன்.. நானும் எவளவு நேரம் தன் வலிக்காத மாதரியே நடிக்கறது..!

சனி யாரை பிடிக்கும்னு சொல்ல முடியாது.

அடுத்து.. நண்பர்களை.. பற்றி.. எல்லோரும்..நல்ல நிலைமைலே இருக்கானுங்க. சோ பேர் சொன்னாக்க செ..... லே அடிப்பானுங்க. முதல்ல நான் நடுதெருவில அரியர்ஸ் ஓட நிக்க காரணமா இருந்த கனவான் பத்தி சொல்றேன்..ஏழு அடியிலே டினோசர் மாத்ரி இருப்பான் ( டினோசர் ...க்கு மூளை சின்னதுன்னு.. அப்புறம் தான் நம்பினேன்..) என் வாழ்கையே.. நாசா மாகிட்டான். (அவனும் இதே மாற்றி சொல்லிருக்கான்) முதல்ல என்ன ஓசி சிகரட்டுக்கு என்னை அடிமை ஆக்கி அப்பரம் என்னை பாக்கெட் பாக்கெட்ஆ வாங்க வச்சிட்டான். அவன் பண்ண கொடுமைய.. ஒரு எபிசொட்லே சொல்ல முடியாது.. அப்புறம் பாப்போம்

ஒரு விசிட்டர் பிடிகிரதுக்குலே கன்னகட்டுதே..!

நன் கஷ்டபட்டு கன்வின்ஸ் பண்ணி ஒரு விசிட்டர் தயார் பண்ணி இருக்கேன். (அவங்க தலை எழுத்து இதை படிக்கனும்னு..) தெறிச்சு ஓடாம இருந்த சரி. அப்பா ...ஒரு விசிட்டர் பிடிகிரதுக்குலே கன்னகட்டுதே..!

கந்தசாமி... நொந்த சாமி ..!

முன்னூறு ரூபா குடுத்து கந்தசாமி பாத்தேன். கொடுமைடா சாமீ. சிவாஜி பார்ட் டூ ன்னு போட்டுருக்கலாம். தலை வலி. எட்டு பாட்டு பேஜார் மாமு.கந்தசாமி மெக்சிகோ லே கண்ணை கட்டி பைட் பண்ணும் போது நம்ம கண்ணையும் கட்டி விட்ட மாத்ரி இருக்கு.கருப்பு பணத்த வெள்ளை பஸ்லே கொண்டு போறதுதான் புதுசு.

எவனுமே எட்டி பாக்காத ப்லாக்

இந்த வர்ஷத்தில எவனுமே எட்டி பாக்காத ப்லாக்.. ஹி ஹி ..நம்மலோடதான்நானும் இந்த ப்லாக் இட்லிவடைப்லாக் ஸ்போட் .காம் மாதிரி கொண்டு வரணும்தான் பாக்கிறேன். பாப்போம்..

நானும் என் நாசமா போன என் ப்ளாகும்

ஹலோ ... old friends க்காக ஆரம்பிச்சேன்.. ஒரு பய எட்டி பாக்க மாட்டேன்கரன்.நானும் என்ன எழுதி தொலக்கிரதுன்னு தெரியலை. யாராவது ஒரு ரிப்ளை குடுத்தா டெய்லி எதாவது உளறி வைக்கலாம். . என்ன கொடுமைடாஇது.. நண்டு சிண்டு எல்லாம் ப்லோக் நடத்தறது.. ம்ம்..