பாசக்கார நண்பன் ஈமொவுக்கு..! உன் பழைய பங்காளியின் குமுறல்..!

பாசக்கார நண்பன் ஈமொவுக்கு..! உன் பழைய பங்காளியின் குமுறல்..!

சரக்கும் சைடிஷ்மாய் ஒத்து வாழ்ந்த நாம், கால கொடுமையினால் தனித்து வாழ்கிறோம்..! இந்த கடிதம் உன் மனசாட்சியை உளுக்குமாயின் நீ தெறித்து ஃபேஸ்புக்குக்கு வருவாய். இல்லையெல்..! நீ ரத்த வாந்தி எடுப்பது நிச்சயம்.. (என்ன பாக்குற..இப்டிதானெ எங்களை எல்லாம் ஏமாத்தின ..படிக்குற காலத்துல)

நாம் வாழ்ந்த கால கட்ட்த்தை ஃப்ளாஷ் பேக் மியுசிக்கொடு நினைத்து பார்க்கிரென்..!

அது ஒரு மாலை நேர மழைக்காலம்...மூதெவி வரக்கூடாது என எல்லாரும் கதவை சாத்தும் நேரம், என் கேடு கெட்டநேரம் தேடி போய் உன் கதவை தட்டினென்..! முதல் சந்திப்பிலெ, கையிலெ டிஃப்ன் பாக்ஸ் , அதிலெ ஒரு குவாட்டர் ஊற்றி, குடிக்க தயாராய் இருந்தாய். ஏன் என்று கேட்ட்தற்க்கு, அவசரத்துக்கு இப்ப்டிதான் என வெட்கம் இன்றி பதில் சொன்னாய்..! தொட்டு கொள்ள எலுமிச்சை ஊறுகாய் என சிக்கனத்தின் சிகரமாய் போனாய்..!

அப்பொது கூட நீ ஒரு போதை மருந்து சப்ளையர் என தெரிந்து இருந்தால் நான் அடி பட்டாலும் பரவாயில்லை என மாடி வழியெ கீழெ குதித்தாவது தப்பி இருப்பென் .ஆனால் விதி வலியது..அதன் கரங்கள் கொடியது..!

உன் கண்கள் குடித்து மயங்கி கிடந்தன..கைகள், சீட்டு விளையாடி களைத்து கிடந்தன..! சரி, வந்த நண்பனிடம் ஒரு வாய் வேண்டுமா எனக்கூட கேட்காது, அவசரத்தில் அப்டியெ டிஃப்ன் பாக்ஸை கவுத்த்தில் உன் நட்பு உள்ளம், பளிச்சென தெரிந்த்த்து..!

காலங்கள் ஒடின..ஆனால் உன்னை பார்த்த உடனெ நீ ஒரு சனியன் என டினோசர் சரியாக கணித்தான்..! அவன் ஒரு தீர்க்கதரிசி..! நீ எங்களுக்கு செய்த பாவங்களை நான் பட்டியலிடுகிறென்..! மனசாட்சி இருந்தால் படித்து பார்த்து ஒரு சர்ச்க்கு போய் பாவ மன்னிப்பு கேள்..!

1. போதை வஸ்துக்களை அறிமுகம் செய்தாய். அதை எப்படி யூஸ் பண்ணுவது என டெமொவும் செய்து காட்டினாய்..! நீ ஒரு ஹோல் சேல் டீலர் என்ற உண்மையை மறைத்தாய்..! டெய்லி குவாட்டர் குடித்தால் குடல் சுத்தமாகும் என பொய் பரப்பி.குடிப்பதை நியாய படுத்தினாய்..!

2. கண்ட பேய் கதை எல்லாம் பசங்களிடம் பரப்பி, எல்லாரையும் பீதி அடைய செய்தாய். தூக்கு போட்டு செத்து போன ஒரு பெண்ணின் ஆவி உன் உடம்பில் இருப்பதாய் நம்ப வைத்து ஒசியில் பான் பராக் வாங்கி போட்டு கொண்டாய்..! நடு ராத்திரியில் மீடியம் போட்டு ஒரு பயலையும் தூங்க விடாமல் செய்தாய்.. பல்லி சத்தம் கேட்டால் கூட, அதையும் யூஸ் பண்ணி பேய் வெத்திலை பாக்கு கேக்குதடான்னு கதை சொல்லி..பீதியை கிளப்பி..அதையும் வாங்க்கி உன் வாயில் போட்டு கொண்டாயெ பாவி நண்பா..!

3. புகையிலை போட்டால் பூச்சி பல் வராது என சொல்லி எல்லாரையும் போட வைத்து, மயக்கத்திலெயெ மெயிண்டன் ஆகும் படி பார்த்து கொண்டாய்.

4. பன்ங்கள்ளு குடித்தால் மைண்ட் ஃப்ரெஷ் ஆகும்னு போய் சொல்லி , எங்களை எல்லாம் ரெகுலர் கஸ்டமர் ஆக்கி, அந்த கமிஷ்னில் நீ கள்ளு குடித்து வயிறு வளர்த்தாய்.

5. டீச்சர் புருஷனை பான் பராக்குக்கு அடிமையாக்கி, அவனிடமிருந்து
அஞ்சு பத்து என கறந்ந்து செலவு செய்தாய்.

6.படியாத தலைமுடியை வைத்து இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் அப்டின்னு பொய் சொன்னாய்..!

7. கொடுமைக்கெல்லாம் கொடுமையாய் ‘சிவனை’ அறிமுகம் செய்தாய்
பிரபஞ்சத்தை காட்டுரென்னு சொல்லி ஒரு ரூமில் போட்டு சாம்பிரானி போட்டாய்..! போதையில் மயங்கிய எங்களின் பாக்கெட்டில் இருந்த்தெல்லாம் கொள்ளை அடித்தாய்..!

8. சரி படிப்பறிவாவது உண்டா உன்னிடம். பேஸிக் லேபின் போது உனக்கு இருப்பதிலெயெ ஈஸியான ப்ரொக்ராம் வந்த்து.. ஒரு பெராந்திஸிஸ் கூட போட தெரியாத பேய் முழி முழித்தாய். சரி கொஸ்டினாவது டைப் பண்ணுவொம் என நீ டிரை பண்ணும் போது L லெட்ட்ர் உன் கண்ணில் படவில்லை.. எவ்வளவொ நீ முயற்சி செய்த போதும் L லெட்டர் கண்டு பிடிக்க முடியலை. வெட்கமெ இல்லாமல் எழுந்து..சார்..என் கீ போர்டுல L லெட்டர் கானொம் சார்ன்னு சொன்னாய்.. சரியா பாருப்பான்னு அவர் சொல்ல, சத்தியமா இல்லை சார்ன்னு நீ சொல்ல உன் கல்வி அறிவ பாத்து மெய் சிலிர்த்து போன வாத்தியாருங்க முகம் எல்லாம் இன்னும் என் கண்ணுலயெ நிக்குது நண்பா..! அப்டியெ ஒரு கீ போர்டுல ரெண்டு L கீ வச்சா மட்டும் நீ என்னா பண்ணிட போற..நண்பா..! அப்பொவெ நான் சொன்னென்..கொஞ்சம் வெய்ட் பன்னி நீ எல்லாம் முதியொர் கல்விலெயெ படிச்சுக்கலாம்னு..நீ கேட்டியா..?

9. சைக்கிள் டைனமொல ஒரு LED கனெக்ட் பண்ணி எரிய வச்சு நான் ஒரு விஞ்ஞானின்னு நீ அடிச்ச கூத்து எல்லாம் இன்னும் என் நிம்மதிய கெடுக்குது மாமு.

10. அடுத்து, உன் வைராக்கியம். ஒரு முரை, நம்ம கூட படிக்கிற பொன்னுக்கு ஆனியன் கல்பனான்னு பேர் வச்சொம். அதை ஒரு பேமானி போய் அந்த பொன்னுக்கிட்டெ போட்டு கொடுக்க.. அது கன்னா பின்னானு சத்தம் போட..நீ வீறு கொண்டு எழுந்தாய். பாரு நீ வீரு கொண்டு எழுந்த்து ஒரு ஞாயிற்று கிழமை..(எப்டி வீக் எண்ட் பாத்து சீன் போட்றான் பாருங்க..!) ஒரு புளிய மரத்துக்கு கீழெ நின்னுட்ட..! அது என்னமொ..இவ்வளொ மரம் இருக்கும் போதும் , உனக்கு புளிய மரம் தான் பிடிக்குது...ஹீம்..!மறுநாள் காலைல ஆனியன பாத்து நாலு கேள்வி கேட்டுட்டுதான் வருவென்னு, தலை முடிய வேற கலைச்சு விட்டுட்ட.! நைட் ஃபுல்லா புளிய மரத்துக்கு கிழெயெ நிக்க போரென்னு சபதம் போட்டு போர்க்கோலம் போட்டாய்.!

நான் சொன்னென்..மாப்ளை நாம பெர் வச்ச அந்த பொன்னு தாண்டா நியாயமா கோப படனும். நீ ஏண்டா மலை ஏற்ற மாத்ரி நிக்க்ரன்னு..எவ்வள்வொ சொல்லி பாத்தொம்..! ஹிம்..என்னெ உன் வைராக்கியம்..! கலைஞ்ச முடி கலைஞ்சது தான்..! சொல்லி எங்களை எல்லாம் புல்லரிக்க வச்சுட்டெ..! அப்புறம் டைம் ஆக் ஒவ்வொருத்தரா கிளம்ப, மாப்ள பாத்துக்கடா புளிய மரமா இருக்கு..உனக்கு வேற அடிக்கடி பேய் புடிச்சுடும். பாத்து சமாளிடான்னு..அவன் ஆப்ப அவ்னுக்கெ திரும்ப வக்க, மானமாவது மன்னாங்கட்டியாவதுன்னு கடைசியா நீயும் ரூமுக்கு வந்து சேந்த..! ஆனா நீ மனுஷன் மாமு..நைட் ஃபுல்லா தலையெ சீவலை நீ.. சொன்ன சொல்ல காப்பத்த உன்ன விட்டா வேற யாரு இருக்கா சொல்லு..!

11. அடுத்து. ஃபிகர் மேட்டர்.. பஸ் ஸ்டாண்டுல நீ கணக்கு பண்ணதெல்லாம் யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிற..அதுக்கெல்லாம் நம்ம கிட்டெ பசங்க இருக்காங்க மாமு...! அது என்னமொ தெரியலை நீ பாத்த ஃபிகர் எல்லாம் ஒரெ அமானுஷ்யமா இருந்த்துன்னு எல்லாரும் சொல்றானுங்க..! நீ, கவர் பண்ண பொன்னுங்க எல்லாம், வெப்பிலை அடிச்ச மாத்ரி ஸ்ட்ரெய்டா பாத்துட்டு போறத நானெ என் கண்ணால பாத்து இருக்கென்.. !

12. அப்புறம் ஒரு முறை நீ உங்க ஊருல முடி வெட்ட போகும் போது..உன் கலைஞ்ச தலை முடிய பாத்துட்டு, கஷ்ட பட்டு வெட்டி விட்டான்..வெட்டிட்டு..அதை சீவ அவன் பட்ட பாடு...ஹீம்..கடைசியா..நான் வெனுன்னா உனக்கு அம்பது ரூபா தரென்..தயவு செஞ்சு சலூன் பக்கம் வராதென்னு..விரட்டி விட்டான்..! அப்பொ நீ கலைஞ்ச தலையொட காலெஜுக்கு வந்து சபதம் போட்டெ..! ( தலைய கலைச்சு சபதம் போட்ரதுல நீ T. ராஜெந்தரையெ மிஞ்சிட்ட போ..!) சொந்தமா ஒரு கத்திரி கோல் வாங்கி நீயெ..உனக்கு முடி வெட்ட கத்துகிட்ட..அதுல என்னா விஷெசம்னா..மோசமா வெட்டினாக்கூட உன் தலைய எவனும் கண்டு பிடிக்க முடியாது..! ஏன்னா உன் முடியொட சிறப்பு அப்புடி.

சின்ன பசங்கன்னு கூட பாக்காமா உன் அண்ணன் பசங்களுக்கு முடி வெட்டி அவனுங்களை வைச்சு தொழில் கத்துகிட்ட. சுமாரா வெட்ட தெரிஞ்சொன்ன, என்கிட்ட வந்து டிஸ்கொ கட்டிங் பன்னிக்கிறியான்னு என்னையெ கேட்ட..! சரி இருபத்தி அஞ்சு ரூபா மிச்சம் பண்ணுவொம்னு, நம்ம்ம்ம்ம்பி உங்கிட்ட என் தலைய ஒப்படைச்சென்...பாவி நண்பா..என்னை ஒரு வாரம் வெளிய தலை காட்ட முடியாத மாத்ரி செஞ்சிட்டியெ..! உங்கிட்ட முடி வெட்டின பயல் ஒருத்தன் உருப்டுருக்கானா சொல்லு..? வெளியிலெருந்து வேற ஆளுங்களை கூட்டி வந்து ரூம்மையெ சலூன் ஆக்கினியெ நண்பா..! உன்னை வாறி வெயில்ல போட..!

13. அப்புறம் வீட்டுக்கு கூட்டிபோய் விருந்து வைக்கிறன்னு கூட்டி போய்..எங்க வீட்டு தோட்டத்தில விளைஞ்சது மாமு, நல்லா சாப்பிடுங்கன்னு...கத்திரிக்கா சாம்பார், கத்திரிக்கா கூட்டு..கத்திரிக்கா, பொறியல்னு எங்களை எல்லாம் கொலை பண்ணியெ நன்பா..! இதுக்கு பேர்தான் விருந்தா..? மார்கெட்ல விக்க முடியாத காய் கறியெல்லாம் செஞ்சு போட்டு, ரெண்டு நாள் வீட்டுல அடைச்சு வச்சு கொடுமை பண்ணியெ..நண்பா...என்ன பாவம் செஞ்சொம் உனக்கு..?

14. பக்கத்து கோவில் திருவிழாவுக்கு போவொம்னு சொல்லிகூப்டு போய்.., குறுக்கு வழியில போவொம்னு சொல்லி, போற வழியில சாராயம் காச்சுற இடத்த எல்லாம் சுத்தி காமிச்சியெ..நீ எல்லாம் ஒரு படிக்கிற புள்ளையா ..சொல்லு..?

15. கடைசியா..உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் பன்ன தப்புக்கு பழைய செருப்ப எடுத்து பத்து தடவை என்னையெ அடிச்சுக்கனும் மாமு...! கடைசி செமஸ்டர் கடைசி வாரம்...பூம்புகார் போற பொன்னுங்களை ஃபாலொ பன்னுவொம் மாமுன்னு சொல்லி என்னை கூப்டு போன..! நானும் உன் ராசி நல்லா தெரிஞ்சும்..உன் கூட வந்தென்..கடைசியா..ஒரு முறை என்னை உத்து பாத்து..மாமு போ..போய் பேசிட்டு சக்ஸ்ஸ் பண்ணிட்டு வானு, நான் டாவடச்ச பொன்னுகிட்டெ அனுப்பின.. நாசம போற நமச்....! சாரி மாமு ஃப்லொல உன் பேரு வந்த்டுச்சு..மன்னிச்சுடு.. அதொட நம்ம படம் கடைசி யாயிடுச்சு..! நீ ஒரு சூன்யம் புடிச்சவன்னு ஊருக்கெ தெரியும்... ஒரு குடுகுடுப்ப காரன பாக்றமாதிரிதான் உன்னை டீல் பன்னானுங்க எல்லாரும்..நான் மட்டும் உன்ன உயிர் நண்பனா வச்ச்ருந்தெனடா...நன்பா எனக்கெ உன் செய்வினைய காமிச்சிட்டியெ..நீ ஒரு மனுஷனா..? சொல்லு..!

உன் மனசாட்சி இருந்தா, பதில் கடிதம் போடு..! இல்லை வழக்கம் போல தலை முடிய கலைச்சு விட்டுட்டு புளிய மரத்துக்கு கீழெ நில்லு மாமு..!

இப்படிக்கு,
மானமுள்ள மெண்டல்..!

Comments

  1. 12. கடைசியா..உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் பன்ன தப்புக்கு பழைய செருப்ப எடுத்து பத்து தடவை என்னையெ அடிச்சுக்கனும் மாமு...! கடைசி செமஸ்டர் கடைசி வாரம்...பூம்புகார் போற பொன்னுங்களை ஃபாலொ பன்னுவொம் மாமுன்னு சொல்லி என்னை கூப்டு போன..! நானும் உன் ராசி நல்லா தெரிஞ்சும்..உன் கூட வந்தென்..கடைசியா..ஒரு முறை என்னை உத்து பாத்து..மாமு போ..போய் பேசிட்டு சக்ஸ்ஸ் பண்ணிட்டு வானு, நான் டாவடச்ச பொன்னுகிட்டெ அனுப்பின.. நாசம போற நமச்....! சாரி மாமு ஃப்லொல உன் பேரு வந்த்டுச்சு..மன்னிச்சுடு.. அதொட நம்ம படம் கடைசி யாயிடுச்சு..! நீ ஒரு சூன்யம் புடிச்சவன்னு ஊருக்கெ தெரியும்... ஒரு குடுகுடுப்ப காரன பாக்றமாதிரிதான் உன்னை டீல் பன்னானுங்க எல்லாரும்..நான் மட்டும் உன்ன நண்பனா வச்ச்ருந்தெனடா...நன்பா எனக்கெ உன் செய்வினைய காமிச்சிட்டியெ..நீ ஒரு மனுஷனா..? சொல்லு..!


    ஈமோ,,,
    இந்த பெயரின் அர்த்த்த்தை கொடுக்கவில்லை...
    எப்படித்தான் இவனுங்களோட மூனு வருசம் வாழ்ந்தேனோ. நினைச்சா தலையை சுத்துது..
    ம் அவன் ஊர் கோவில் விழாவுக்கு அழைத்துபோய் அங்கு சுற்றிவந்தோமே அதையும் கொஞ்சம் டச் பண்ணியிருக்கலாம்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. ... Ithu puriyala mams .. Enna point ithu..

    கொடுமைக்கெல்லாம் கொடுமையாய் ‘சிவனை’ அறிமுகம் செய்தாய்
    பிரபஞ்சத்தை காட்டுரென்னு சொல்லி ஒரு ரூமில் போட்டு சாம்பிரானி போட்டாய்..! போதையில் மயங்கிய எங்களின் பாக்கெட்டில் இருந்த்தெல்லாம் கொள்ளை அடித்தாய்..!

    ReplyDelete
  4. Excellent and good comments,Need more about kosu

    ReplyDelete
  5. ஷாகுல் மாம்ஸ் .. ஈமொ மானஸ்தன்.. அவன் இத சும்மா விட மாட்டான் .. அவன் மருதநல்லூர் சிங்கம் ...

    பலமான பதிலடி இருக்கும் .. பண்டி மாம்ஸ் .. எப்படி சமாளிக்க போறனோ? ..

    (என்ன பில்டப் போதுமா..)

    மாம்ஸ் .. இன்னைக்கு நமச்சி கிட்ட பேசுனேன் .. அவனுக்கு .. புள்ள குட்டிய பாக்குறதுகே டைம் சரியாய் இருக்குதாம் ... ரொம்ப பீல் பண்றான் .. பட் அவன் அடிகடி FACEBOOK வரன்..

    ReplyDelete
  6. இவ்வளவு எழுதியும் இவன் சைலண்டா இருக்கான்னா..ஒன்னு மானம் மரியாதை எல்லா மருதாநல்லுருலெயெ கிழட்டி வச்சுட்டு வந்து இருக்கனும்..இல்ல இவன் ஐடி ஃபீல்டல தான் இருக்கானா..? இல்ல..மேட்டுர் டேம்ல மீன் புடிச்சு விக்கிறான்னானு தெரியனும்..! கேட்டு சொல்லுடா லோக்கல் நண்பா..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!